Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திருச்சியில் சிவாஜி, எம்.ஆர். ராதாவுக்கு சிலை: கேஎன். நேரு தகவல்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர். ராதா ஆகியோருக்கு திருச்சியில் சிலை நிறுவப்படும் என தமிழக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு விழா, கலைச்செம்மல் விருது வழங்கும் விழா, பொற்கிழி வழங்கும் விழா, புத்தகம் வெளியீட்டு விழா போன்றவை திருச்சி ஆர்.ஆர்.சபாவில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளர் முகமது மஸ்தான் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட இசை நாடகப் பிரிவு தலைவர் கிருஷ்ணப்பா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அமைச்சர் கே.என்.நேரு, நடிகர் ஹரிஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது,
தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகாலமாக திராவிட இயக்கங்கள் ஆட்சி பொறுப்பு நடத்த நாடகம் தான் அடிப்படையான காரணம்.
அண்ணா, கருணாநிதி என அடுத்தடுத்து நாடக கலைஞர்களாக ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள். முதலமைச்சர் கருணாநிதி சென்னை அருகே 10 ஏக்கர் நிலத்தில் நாடக கலைஞர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி இருக்கிறார்.
அதே போன்று, திருச்சி அரியமங்கலத்திலும் நாடக கலைஞர்களுக்கு வீடுகள் ஒதுக்கி, கட்டப்பட்ட வீடுகளாக நாடக கலைஞர்களுக்கு வழங்க உள்ளோம்.
திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜியின் சிலையை நிறுவ வேண்டும் என்பது ஆசை. அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. அதே போன்று நடிகவேள் எம்.ஆர்.ராதா சிலையும் திறந்து வைக்கப்பட உள்ளது.
விழாவில் சிறந்த நாடக கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதையும், நலிந்த கலைஞர்களுக்கு பொற்கிழியையும் அமைச்சர் கே.என்.நேரு வழங்கி கவுரவித்தார்.