Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மீண்டும் பஞ்சாயத்துக்கு வரும் மாவீரன்... ரீ-ஷூட்டுக்கு ரெடியான சிவகார்த்திகேயன்..?
சென்னை: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மாவீரனில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மண்டேலா திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின், மாவீரன் படத்தை இயக்கி வருகிறார்.
சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கும் மாவீரன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது.
இந்நிலையில், மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸில் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவீரன் படக்குழுவின் பொங்கல் கொண்டாட்டம்... ஜோடியாக வந்த சிவகார்த்திகேயன், அதிதி
மாவீரனாகும் சிவகார்த்திகேயன்
டாக்டர், டான் என ஹிட் கொடுத்து வந்த சிவகார்த்திகேயன், பிரின்ஸ் படத்தின் தோல்வியால் கொஞ்சம் துவண்டு காணப்படுகிறார். இதனால் தற்போது நடித்து வரும் மாவீரன் படத்தை அதிகம் நம்பியுள்ளார். மண்டேலா படத்தைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கி வரும் மாவீரன், தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக மிஷ்கினும் நடித்து வருகின்றனர். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
படப்பிடிப்பில் மோதலா?
ஏற்கனவே சிவகார்த்திகேயன் கடன் பிரச்சினையில் சிக்கி தவிப்பதால், பைனான்சியர்கள் நெருக்கடி கொடுப்பதாக செய்திகள் வெளியாகின. சொந்த பட தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்ததே கடன் பிரச்சினைக்கு காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், கடன் பிரச்சினைக்கும் மாவீரன் ரிலீஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தகவல்கள் வெளியாகின. இதனிடையே ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாகவும், அதனால் ஷூட்டிங் கேன்சல் ஆனதாகவும் சொல்லப்பட்டது.
மாவீரன் ரீ-ஷூட்டிங்
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பொங்கல் தினத்தில் மாவீரன் படக்குழுவினர் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா உள்ளிட்ட மாவீரன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஏற்கனவே ஷூட் செய்யப்பட்டதில் சில காட்சிகள் சிவகார்த்திகேயனுக்கு பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் அவருக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகின.
ரிலீஸ் தேதிக்கு வெயிட்டிங்
தொடர்ந்து சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் இடையே மோதல் ஏற்பட்டுவருவதால், மீண்டும் சில காட்சிகளை மட்டும் ரீ-ஷூட் செய்யவுள்ளார்களாம். சிவகார்த்திகேயன் கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஒவ்வொரு காட்சியையும் திருப்தி இருந்தால் மட்டுமே ஓக்கே சொல்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தற்போது மாவீரன் படத்தின் சில காட்சிகள் ரீ-ஷூட் செய்யப்பட உள்ளதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.