சென்சாருக்கு போய் ரத்தம் சிந்தாமல் பத்திரமாக வந்த 'சிவப்பு'
சென்னை: சத்யசிவா இயக்கியுள்ள சிவப்பு படம் சென்சாரில் கத்தரிபடாமல் வெளியே வந்துள்ளது.
கழுகு படம் மூலம் இயக்குனரான சத்யசிவா இலங்கை தமிழரின் வாழ்கையை அடிப்படையாக வைத்து எடுத்துள்ள படம் சிவப்பு. அகராதி, பிரம்மன் ஆகிய படங்களில் நடித்துள்ள நவீன் சந்திரா இந்த படத்தில் ஹீரோவாகவும், ரூபா மஞ்சரி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை முக்தா ஆர்.கோவிந்தின் முக்தா என்டர்டைன்மென்ட்(பி) லிட், புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ் (பி) லிட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.

சிவப்பு படத்தில் ரூபா மஞ்சரி மேக்கப் போடாமல் நடித்துள்ளார். இருப்பினும் அழகாகவே தெரிகிறார். படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் படம் சான்றிதழ் பெற சென்சார் போர்டுக்கு சென்றது.
சென்சார் போர்டு படத்தில் வரும் எந்த காட்சிக்கும் கத்தரி போடாமல் யு சான்றிதழ் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











