Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்சாருக்கு போய் ரத்தம் சிந்தாமல் பத்திரமாக வந்த 'சிவப்பு'
சென்னை: சத்யசிவா இயக்கியுள்ள சிவப்பு படம் சென்சாரில் கத்தரிபடாமல் வெளியே வந்துள்ளது.
கழுகு படம் மூலம் இயக்குனரான சத்யசிவா இலங்கை தமிழரின் வாழ்கையை அடிப்படையாக வைத்து எடுத்துள்ள படம் சிவப்பு. அகராதி, பிரம்மன் ஆகிய படங்களில் நடித்துள்ள நவீன் சந்திரா இந்த படத்தில் ஹீரோவாகவும், ரூபா மஞ்சரி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை முக்தா ஆர்.கோவிந்தின் முக்தா என்டர்டைன்மென்ட்(பி) லிட், புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ் (பி) லிட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
சிவப்பு படத்தில் ரூபா மஞ்சரி மேக்கப் போடாமல் நடித்துள்ளார். இருப்பினும் அழகாகவே தெரிகிறார். படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் படம் சான்றிதழ் பெற சென்சார் போர்டுக்கு சென்றது.
சென்சார் போர்டு படத்தில் வரும் எந்த காட்சிக்கும் கத்தரி போடாமல் யு சான்றிதழ் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.