Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிவப்பு பட சிறப்பு காட்சி: உரைக்கு நடுவே உணர்ச்சி வசப்பட்டு அழுத ராஜ்கிரண்!
சென்னை: சிவப்பு படத்தின் சிறப்புக் காட்சியில் நடிகர் ராஜ்கிரண் பங்கேற்று பேசினார். பேச்சுக்கு நடுவே இலங்கைத் தமிழ் மக்களின் நிலையை நினைத்து அவர் கண்ணீர் சிந்த அந்த இடமே உணர்ச்சி மயமானது.
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நவீன்சந்திரா, ரூபா மஞ்ஜரி, ராஜ்கிரண் நடித்துள்ள படம் சிவப்பு. இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் சிறப்புக் காட்சியில் நடிகர் ராஜ்கிரண் பேசும்போது "இலங்கை போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு நடந்தது இனப்படுகொலை.
இந்த சோகத்தை தமிழ்நாடு தவிர இந்தியாவில் வேறு எங்கும் மீடியாவில் வெளிவராதவண்ணம் இந்திய வெளியுறவு துறை தடுத்துவிட்டது. பாரதிய ஜனதா அரசு இந்துத்வா பற்றி பேசுகிறது.
ஆனால் இலங்கையில் 2 ஆயிரம் கோயில்கள் இடிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததா? அதற்கு மாறாக ராஜபக்சேவுக்கு திருப்பதி கோயிலுக்கு வந்து செல்ல சிவப்பு கம்பளம் விரித்தது.
தமிழ் இனம் வருங்காலத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக சிங்களர்களைவிட்டு தமிழ் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். இங்கு மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஒருவரை அடித்து கொல்கின்றனர்.
ஆனால் லட்சக்கணக்கான தமிழர்கள் சாகடிக்கப்பட்டதை கேட்க மறுக்கின்றனர். வறுமையில் பெண்கள் சிலர் விபசாரம் செய்கின்றனர். இந்த கொடுமையை எல்லாம் படத்தில் காட்டக்கூடாது என்று தடை உள்ளது, ஆனால் இதையெல்லாம் உணர்த்தும் விதமாக சிவப்பு படம் உருவாகி உள்ளது.
இவ்வாறு பேசிய ராஜ்கிரண் பேச்சுக்கு நடுவே உணர்ச்சி வசப்பட்டு கதறி அழ ஆரம்பித்தார், இதனால் அந்த இடமே சோகமயமானது. பின்னர் அவரிடம் அரசியல்பற்றி விமர்சிக்கிறீர்களே நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று பதிரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ராஜ்கிரண் 'எனது கைகளில் ஒன்றும் இல்லை எல்லாம் ஆண்டவன் கையில் இருக்கிறது' என்று கூறினார்.
சிவப்பு திரைப்படத்தை புன்னகைப்பூ கீதா தயாரித்திருக்கிறார். ரகுநந்தன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.