Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பழனி கோவிலில் தங்கத்தேர் இழுத்த சினேகா.. முண்டியடித்த ரசிகர்களால் பரபரப்பு
பழனி: நடிகை சினேகா நேற்றிரவு பழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். சினேகா தேர் இழுத்தபோது அவரைக் காண முண்டியடித்த ரசிகர்களால் அங்கு லேசான பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை சினேகா-பிரசன்னா தம்பதியர் நேற்றிரவு தங்கள் மகன் விகானுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பழனி முருகன் கோயிலுக்கு வந்தனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தபின் சினேகா-பிரசன்னா இருவரும் சேர்ந்து தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.
பின்னர் தங்கள் குழந்தை விகானை விகானை தங்க தொட்டிலில் போட்டு நேர்த்திக்கடன் செய்தனர். சினேகா தம்பதியரை கண்டதும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சினேகாவை பார்க்க முண்டியடித்தனர்.
இதனால் சிறிதுநேரம் பழனி முருகன் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி அங்கு நடந்த காலைநிகழ்ச்சிகளில் தம்பதியர் இருவரும் கலந்து கொண்டனர்.