Don't Miss!
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தெலுங்கில் கனிமொழி - தடை கோரி நடிகை சோனா வழக்கு!
தமிழில் சோனா தயாரித்த படம் கனிமொழி. ஆனால் சரியாகப் போகவில்லை.
இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து, 'லவ் ஜர்னி' என்ற பெயரில் வெளியிட முயற்சி நடந்து வருகிறது. இதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் யுனிக் புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமைரான நடிகை சோனா மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "நடிகர் ஜெய் நடிக்கும் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் தயாரித்து வந்தது. படத்தை முடிக்க முடியாததால், என்னை அணுகினர்.
படத் தயாரிப்புக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்தேன்; அதன் உரிமையை, விலைக்கு வாங்கினேன். 'கனிமொழி' என்கிற பெயரில் படம் வெளியானது. படத்தை வெளியிட்டேன்; பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
தற்போது, இப்படத்தை தெலுங்கு மொழியில், டப்பிங் செய்வதற்கான நடவடிக்கைகளில், அம்மா கிரியேஷன்ஸ் ஈடுபட்டுள்ளது. இதற்கு என் ஒப்புதலை பெறவில்லை. 'லவ் ஜர்னி' என்கிற பெயரில் படத்தை வெளியிட உள்ளனர். இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்", என்று குறிப்பிட்டுள்ளார்.
மனுவை நீதிபதி வாசுகி விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் தங்கசிவன் ஆஜரானார். விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி வாசுகி தள்ளி வைத்துள்ளார்.