Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
"கபாலி".. நமக்கெல்லாம் கிடைக்க யார் காரணம் தெரியுமா பாஸ்?
சென்னை: ரஜினி படத்தை இயக்க பல மூத்த இயக்குநர்கள் காத்துக் கொண்டிருக்க, இரண்டே படங்கள் இயக்கிய பா.ரஞ்சித் படத்தில் நடிக்க ரஜினி எப்படி சம்மதித்தார் என்று பலரது மனதையும் அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா தற்போது பதில் அளித்துள்ளார்.
அட்டக்கத்தி, மெட்ராஸ் என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பா.ரஞ்சித். அவரே ஆச்சர்யப்பட்டுப் போகும் அளவில், அவரது மூன்றாவது படமான கபாலியில் ரஜினி நாயகன் ஆனார்.
மூத்த இயக்குநர்கள் பலர் எப்போது நமக்கு ரஜினி பட வாய்ப்பு கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருக்கையில், ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கி முடித்து விட்டார் ரஞ்சித். அடுத்தமாதம் இப்படம் ரிலீசாக இருக்கிறது.
சாதனை நாயகன்...
ஆடியோ, டீசர் என இதுவரை கபாலி தொடர்பாக வெளியானவை அனைத்தும் சாதனை புரிந்து வருகின்றன. இந்நிலையில், இளம் இயக்குநரின் படத்தில் ரஜினி எப்படி நடிக்க சம்மதித்தார் என்ற பலரின் ஆச்சர்யத்திற்கு, ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.
அட்டக்கத்தி...
அதில் அவர் கூறியிருப்பதாவது, "நான் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக ‘கோவா' படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ரஞ்சித்தின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய முதல் படமான ‘அட்டக்கத்தி'யை நான் தயாரிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், ஒருசில காரணங்களால் அது முடியாமல் போனது.
மேட்ராஸ்...
அதன்பிறகு, ‘மெட்ராஸ்' படம் வெளிவந்த பிறகு, அந்த படத்தை பார்த்துவிட்டு அப்பா ஒருநாள் என்னை அழைத்து ‘மெட்ராஸ்' படம் மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார். உடனே, எனது மனதுக்குள் ரஞ்சித்தும், அப்பாவும் சேர்ந்து பணியாற்றினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஓடியது.
மலேசிய டான்...
பிறகு, ரஞ்சித்தை ஒருநாள் சந்தித்து அப்பாவுக்கு ஒரு கதை பண்ணுகிறீர்களா? என்று கேட்டதும், அவர் உறைந்தே போய்விட்டார். சில நாட்கள் கழித்து ரஞ்சித், என்னிடம் வந்து அப்பா நடிக்கும் படத்தில் அவர் ‘மலேசியா டானா'க வருகிறார் என்று சொன்னதும், அதுவே போதுமானதாக இருந்தது.
கபாலி...
இதை அப்பாவிடம் போய் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. அதுதான் இன்றைய கபாலி" எனத் தெரிவித்துள்ளார் சவுந்தர்யா.
மகிழ்ச்சி..!