Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சுத்திப் போடுங்க சவுந்தர்யா.. உண்மையிலேயே ‘இது தான் ஆசிர்வாதம்’!
சென்னை: தன் கணவருடன் மகன் வேத் விளையாடும் புகைப்படம் ஒன்றை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் ரஜினி மகள் சவுந்தர்யா.
நடிகர் ரஜினிகாந்தின் மகளும், கோச்சடையான், விஐபி 2 போன்ற படங்களை இயக்கியவருமான சவுந்தர்யாவிற்கும், விசாகனுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். சவுந்தர்யாவிற்கு முதல் திருமணம் மூலம் வேத் என்ற மகன் உள்ளார்.
கோலாகலமாக நடைபெற்ற சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
வெளியானது விஷால்-அனிஷா நிச்சயதார்த்த புகைப்படங்கள்.. அட, இவங்க எல்லாம் போயிருக்காங்களே!
|
சவுந்தர்யா மகன் தேவ்
அதிலும் குறிப்பாக சவுந்தர்யாவின் மருதாணி வைத்த கைகளை வேத் பார்ப்பது, மணமேடையில் சவுந்தர்யா மடியில் வேத் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது. சவுந்தர்யாவிற்கு திருமணம் முடிந்ததும் ரஜினி, லதா ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் ஆனந்தக்கண்ணீர் விடும் புகைப்படமும் வைரலானது.
தேனிலவில் மகனின் நினைவு
தேனிலவு சென்ற போதும், மகன் வேத்-ஐ நினைத்துக் கொண்டிருப்பதாக சவுந்தர்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா.
மகிழ்ச்சியான விளையாட்டு
அந்தப் புகைப்படத்தில் விசாகனும், வேத்தும் மகிழ்ச்சியாக விளையாடுகின்றனர். இதனை சவுந்தர்யா, ‘இது தான் ஆசிர்வாதம்' எனக் குறிப்பிட்டு டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.
ரஜினி தான் காரணம்
அதில் ஒரு ரசிகர், "இந்த சந்தேகத்திற்கு முக்கிய காரணம் ரஜினி மட்டுமே. பெருமிதம் கொள்ளுங்கள் ரஜினியின் ஆசை மகள் என்று. வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க" என வாழ்த்தியுள்ளார். அதேபோல் பலரும் சவுந்தர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.