Just In
- 36 min ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
- 46 min ago
கமலையே திக்குமுக்காட வைத்த ஷெரின்.. மனசே இல்லாமல் வெளியே வந்த ரியோ.. பங்கம் செய்த பிக்பாஸ்!
- 1 hr ago
என்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு பாடியும் அசத்தல்!
- 2 hrs ago
வாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க!
Don't Miss!
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுத்திப் போடுங்க சவுந்தர்யா.. உண்மையிலேயே ‘இது தான் ஆசிர்வாதம்’!
சென்னை: தன் கணவருடன் மகன் வேத் விளையாடும் புகைப்படம் ஒன்றை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் ரஜினி மகள் சவுந்தர்யா.
நடிகர் ரஜினிகாந்தின் மகளும், கோச்சடையான், விஐபி 2 போன்ற படங்களை இயக்கியவருமான சவுந்தர்யாவிற்கும், விசாகனுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். சவுந்தர்யாவிற்கு முதல் திருமணம் மூலம் வேத் என்ற மகன் உள்ளார்.
கோலாகலமாக நடைபெற்ற சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
வெளியானது விஷால்-அனிஷா நிச்சயதார்த்த புகைப்படங்கள்.. அட, இவங்க எல்லாம் போயிருக்காங்களே!
|
சவுந்தர்யா மகன் தேவ்
அதிலும் குறிப்பாக சவுந்தர்யாவின் மருதாணி வைத்த கைகளை வேத் பார்ப்பது, மணமேடையில் சவுந்தர்யா மடியில் வேத் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது. சவுந்தர்யாவிற்கு திருமணம் முடிந்ததும் ரஜினி, லதா ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் ஆனந்தக்கண்ணீர் விடும் புகைப்படமும் வைரலானது.

தேனிலவில் மகனின் நினைவு
தேனிலவு சென்ற போதும், மகன் வேத்-ஐ நினைத்துக் கொண்டிருப்பதாக சவுந்தர்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா.

மகிழ்ச்சியான விளையாட்டு
அந்தப் புகைப்படத்தில் விசாகனும், வேத்தும் மகிழ்ச்சியாக விளையாடுகின்றனர். இதனை சவுந்தர்யா, ‘இது தான் ஆசிர்வாதம்' எனக் குறிப்பிட்டு டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.

ரஜினி தான் காரணம்
அதில் ஒரு ரசிகர், "இந்த சந்தேகத்திற்கு முக்கிய காரணம் ரஜினி மட்டுமே. பெருமிதம் கொள்ளுங்கள் ரஜினியின் ஆசை மகள் என்று. வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க" என வாழ்த்தியுள்ளார். அதேபோல் பலரும் சவுந்தர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.