முழுக்க புதுமுகங்கள்.. காமெடி கலந்த ரொமான்ஸ் கதை... சௌந்தர்யாவின் ப்ளான்!
முதல் படமே அப்பாவை வைத்து அனிமேஷன் படமாக இயக்கிய சவுந்தர்யா தனது அடுத்த படத்தை இயக்க மூன்று ஆண்டுகளாக காத்திருந்தார். 'முதல்ல குடும்பம், அப்புறம் சினிமா' என்ற அப்பா அட்வைஸ் காரணமாக ஒரு பையனை பெற்று அப்பா கையில் கொடுத்துவிட்டு கணவரையும் பிரிந்துவிட்டார் சௌந்தர்யா.
விவாகரத்தில் இருந்து மீண்டுவர சினிமா இயக்குவதே வழி என்று ஸ்க்ரிப்டில் பிஸியாகிவிட்டார். சவுந்தர்யா இயக்கும் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. முதலில் தனுஷ் ஹீரோ என்று தகவல்கள் வந்தன.

ஆனால் சௌந்தர்யா இயக்கவிருப்பது காதலுடன் கூடிய காமெடி கதையாம். இந்தக் கதைக்கும் தனுஷுக்கும் சம்பந்தமே இல்லை என்பது கூடுதல் தகவல்.
புதுமுகங்களையே தேடி வருகிறார். நடிகர்கள், டெக்னிஷியன்கள் தேர்வு முடிந்ததும் டிசம்பரில் படப்பிடிப்புக்கு செல்லலாம் என்று திட்டமிடுகிறார்.


Click it and Unblock the Notifications











