Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விஐபி 2 படத்தில் அனிருத்தை ஓரங்கட்டினோமா?: சவுந்தர்யா
சென்னை: விஐபி 2 படத்திற்கு அனிருத்தை விட்டுவிட்டு ஷான் ரோல்டனை ஒப்பந்தம் செய்தது ஏன் என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
விஐபி படத்திற்கு இசையமைத்த அனிருத் விஐபி 2 படத்தில் இல்லை. விஐபி 2 படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். விஐபி 2 படத்தில் அனிருத் இல்லாதது அவரது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து விஐபி 2 இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது,
அனிருத்
அனிருத்தை ஓரங்கட்டவில்லை. அனி ஒரு திறமையான இசையமைப்பாளர். அவரை நினைத்து எங்கள் குடும்பமே பெருமைப்படுகிறது. விஐபி 2 படத்திற்கு ஷான் தான் சரி என்று நானும், தனுஷ் சாரும் நினைத்தோம்.
கஜோல்
நான் கஜோலின் மிகப் பெரிய ரசிகை. நானும், டி சாரும் விஐபி 2 திரைக்கதை பற்றி விவாதித்தபோது வசுந்தரா கதாபாத்திரத்திற்கு கஜோல் மேடம் தான் சரி என்று எங்களுக்கு தோன்றியது.
மகன்
ஷூட்டிங் இல்லாத நேரத்தில் நான் என் மகன் வேதுடன் நேரத்தை செலவிடுவேன். யாத்ரா மற்றும் லிங்காவுக்கு தங்களின் அப்பா தனுஷை படங்களில் பார்க்க மிகவும் பிடிக்கும்.
சவுந்தர்யா
ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி சவுந்தர்யா ரஜினிகாந்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, எங்கள் குடும்பத்தில் எதுவாக இருந்தாலும் ஒன்றாக அமர்ந்து பேசுவோம். ஆனால் தந்தை மற்றும் அரசியல் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்றார்.
அரசியல்
கமல் அரசியலுக்கு வருவது பற்றி கேட்டதற்கு, கமல் சாரும், அப்பாவும் எப்பொழுதுமே நல்ல நண்பர்கள். அவர் எப்பொழுதும் நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்று சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.