மனதை காத்தாட வைக்கும் எஸ்பிபி பாடிய காத்தாடி மேகம் பாடல்...வைரலாகும் வீடியோ

சென்னை : தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் மறைந்த பிரபல பின்னர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். இவர் 2020 ம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி காலமானார். எஸ்பிபி.,யின் பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

அவரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எஸ்பிபி பாடிய தனிப் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டார் மியூசிக் லேபிளில் வெளியாகியுள்ள இந்த பாடலை குட்டி ரேவதி எழுதியுள்ளார். விக்னேஷ்வரன் கல்யாணராமன் இசையமைத்துள்ளார். எஸ்பிபி பாடிய காத்தாடி மேகம் என்ற இந்த பாடல் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு ரசிகனின் ஆனந்த கருணம்

ஒரு ரசிகனின் ஆனந்த கருணம்

காத்தாடி மேகம் பாடலுக்கு இசையமைத்த விக்னேஷ்வரன் கல்யாணராமன் இதுகுறித்து கூறுகையில், "நான் என்றென்றும் போற்றும் ஒரு அனுபவ மேதை எஸ்பிபி. இந்த பாடலை அவருக்காக இசையமைத்தது எனக்கு ஒரு ரசிகனின் தருணம். நிச்சயமாக, நான் இசையை ரசித்து கொண்டாடி வளர்ந்தேன், எஸ்பிபி சாருடன் பணியாற்றுவது எனக்கு ஒரு நீண்ட கனவு.

எஸ்பிபி.,யின் நினைவலைகள்

எஸ்பிபி.,யின் நினைவலைகள்

கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நான் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்தபோது, ​​அவருடன் எனது முதல் நினைவலைகள், சரியாக 10 ஆண்டுகளுக்கு முன், அங்கு அவர் தொடர்ந்து வந்து அவரது பாடல்களைப் பதிவுசெய்வார். குறிப்பாக, 100 வருட இந்திய சினிமா தொகுப்புக்கு அவர் இசையமைத்த பாடலுக்கான சவுண்ட் இன்ஜினியராக எனது பெயர் அவரது நாட்குறிப்பில் முதலிடத்துக்கு சென்றது.

எஸ்பிபி பாடிய தனிப்பாடல்

எஸ்பிபி பாடிய தனிப்பாடல்

எஸ்பிபி சாருடன் ஒரு சுயாதீனமான தனிப்பாடலில் பணியாற்ற நான் கடுமையாக விரும்பினேன். அவர் இதற்கு முன்னர் பல திரைப்படமல்லாத ஆல்பங்களில் அவர் பாடிய உள்ளார். இருந்தபோதிலும், அவை அனைத்தும் ஆன்மீக மற்றும் பக்தி பாடல்கள். பின்னர், நாங்கள் வேறு திட்டத்தில் ஒன்றாக வேலை செய்யும் போது குட்டி ரேவதி மேடமுடன் இந்த யோசனையைப் பகிர்ந்து கொண்டேன்.

தயங்கிய எஸ்பிபி

தயங்கிய எஸ்பிபி

நான் எஸ்பிபி சாரை அணுகியபோது, ​​ஆரம்பத்தில் இது ஒரு திரைப்பட பாடல் அல்ல என்று கூறப்பட்டபோது அவருக்கு ஒரு தயக்கம் இருந்தது. அவர் அமெரிக்காவில் இருந்தபோது நான் ட்ராக் அனுப்ப வேண்டியிருந்தது, அந்த ட்ராக்கை கேட்டபின், அவர் தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.

எஸ்பிபி.,யிடம் கிடைத்த பாராட்டு

பின்னர், அவர் இசைஞானி இளையராஜா சாரின் பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நான் நான்கு-ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இருப்பினும், ஒரு இசை நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டபோது அவர் இந்த பாடலை பாடி பதிவுசெய்தார். நான் முற்றிலும் மயக்க நிலை அடைந்தேன். அவர் என்னை அழைத்து, "நல்ல திறமையாளர் நீங்கள்" என்று கூறி பாராட்டினார், மேலும் அவர் இந்த பாடலைப் பாடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

விளம்பரம் தேட நினைக்கவில்லை

விளம்பரம் தேட நினைக்கவில்லை

தவிர, நான் அவரையும் இந்த பாடலுக்காக படமாக்க விரும்பினேன். அவரை இழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் நாம் அனைவரும் அதிர்ச்சியடைந்த நேரம் என்பதாலும், நான் அவரை கொண்டு எவ்வித அனுதாபத்தையும் பெற்று இந்த பாடலை வெளியிட்டு வரவேற்பைப் பெற நினைக்கவில்லை. அதனால் ரிலீஸை தள்ளிவைத்து அவரது பிறந்தநாளை முன்னிட்டு இப்பாடலை வெளியிட முடிவு செய்தேன். " என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X