Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அமெரிக்காவில் கச்சேரி: எஸ்.பி.பி.க்கு வந்த அடுத்த சோதனை
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கச்சேரி நடத்தி வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியமின் பாஸ்போர்ட், கிரெட்டி கார்டுகள் இருந்த பை திருடு போயுள்ளது.
எஸ்.பி.பி. 50 என்ற பெயரில் வெளிநாடுகளில் இசை கச்சேரி நடந்து வருகிறது. எஸ்.பி.பி. சரண் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சிகளில் எஸ்.பி. பி. கலந்து கொண்டு பாடி வருகிறார்.
தற்போது அமெரிக்காவில் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிலையில் எஸ்.பி.பி.யின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டுகள், ரொக்கம் உள்ளிட்டவை இருந்த பை திருடு போயுள்ளது.
இது குறித்து எஸ்.பி.பி. உடனே அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திடம் தெரிவித்துள்ளார். அவர்கள் அவருக்கு 24 மணிநேரத்திற்குள் மாற்று பாஸ்போர்ட் அளித்துள்ளனர்.
இதை எஸ்.பி.பி. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிகளில் எஸ்.பி. பி. இசைஞானியின் பாடல்களை பாட அவரோ தன்னிடம் அனுமதி பெறாமல் பாடக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து இனி மேடைகளில் இளையராஜா பாடல்களை பாடுவது இல்லை என்றார் எஸ்.பி.பி. என்பது குறிப்பிடத்தக்கது.