நம்ம குட்டு உடைந்திடுமோ?: ஸ்ரீ லீக்ஸால் பயத்தில் இருக்கும் என்.ஆர்.ஐ.க்கள்
Recommended Video

ஹைதராபாத்: ஸ்ரீ லீக்ஸால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் சிலர் பயத்தில் இருக்கிறார்களாம்.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்பு தேடி வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் லீலை புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஸ்ரீ லீக்ஸால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் சிலருக்கு பயம் வந்துள்ளதாம்.

நடிகைகள்
பிரபல நடிகைகள், வளர்ந்து வரும் நடிகைகள் அடிக்கடி அமெரிக்காவுக்கு செல்கிறார்கள். அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் என்.ஆர். ஐ.க்கள் ஏற்பாடு செய்யும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். மேலும் பார்ட்டிகளுக்கும் செல்கிறார்கள்.

என்.ஆர்.ஐ.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், மாநாடுகளில் தவறாமல் கலந்து கொள்பவர் ஸ்ரீ ரெட்டி. மாநாடுகள் முடிந்த பிறகு சில என்.ஆர்.ஐ.க்கள் ஸ்ரீ ரெட்டியுடன் தனியாக நேரம் செலவிட்டுள்ளனர்.

வெளிநாடு
ஸ்ரீ ரெட்டியுடன் தனியாக நேரம் செலவிட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஸ்ரீ லீக்ஸால் கதி கலங்கிப் போயுள்ளார்களாம். ஹைதராபாத்தில் உள்ள மீடியா நண்பர்களுக்கு போன் செய்து ஸ்ரீ ரெட்டியிடம் உள்ள ஆதாரங்கள் குறித்து விசாரித்து வருகிறார்களாம்.

கவலை
ஸ்ரீ லீக்ஸின் ஒரு பகுதியாக தங்களின் புகைப்படங்களும் வெளியே வந்தால் மானம் கப்பல் ஏறிவிடுமே என்று அவருடன் தனியாக இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவலையில் உள்ளார்களாம். ஸ்ரீ ரெட்டி யாருடன் தனியாக நேரம் செலிவிட்டாலும் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வாராம்.


Click it and Unblock the Notifications











