Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பல ஹீரோக்களே சொல்ல பயப்படும் உண்மையை போட்டுடைத்த ஸ்ரீ ரெட்டி
Recommended Video
ஹைதராபாத்: பல ஹீரோக்களே சொல்ல பயப்படும் உண்மையை போட்டுடைத்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு திரையுலகில் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்து வருகிறார்.
அதற்கான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி அனைவரையும் அதிர வைத்தார்.
தற்கொலை
சினிமா பின்னணி இல்லாமல் வந்த உதய் கிரண் போன்றோர் தற்கொலை செய்கின்றனர். ஏனென்றால் தெலுங்கு திரையுலகை நான்கு பெரிய குடும்பங்கள் ஆட்டி வைக்கிறது என்கிறார் ஸ்ரீ ரெட்டி.
வாரிசுகள்
அந்த நான்கு குடும்பத்தார் தங்களின் குழந்தைகளை சினிமாவில் வளர்த்துவிட அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். வேறு யாராவது வளர்ந்தால் அவர்களை பற்றி தவறான கருத்துகளை பரப்பி நாசமாக்கிவிடுகிறார்கள் என்று ஸ்ரீ ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
மீடியா
தெலுங்கு திரையுலகில் நடப்பது குறித்து மீடியாவிடம் எதுவும் கூறாமல் இருக்க எனக்கு கோடிக் கணக்கில் பணம் தர முன் வந்தது மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன். திரையுலகில் அவர்கள் மாற்றம் செய்ய விரும்பவில்லை என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
பிரச்சனை
நான் எனக்கு மட்டும் அல்ல அனைத்து நடிகைகளுக்ககாவும் போராடுகிறேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவேன். அவர்கள் என் கெரியரை ஏற்கனவே நாசமாக்கிவிட்டார்கள். அதற்காக எல்லாம் போராடுவதை நிறுத்த மாட்டேன் என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
நடவடிக்கை
இந்த நாள் வரை கேசிஆர் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு பெண் பிலிம் சேம்பர் முன்பு நிர்வாணமாக நிற்கிறாள். மக்கள் அவளை ஆர்வத்துடன் வந்து பார்க்கிறார்கள். முதல்வர் இது குறித்து சமூகத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.