‘உதயநிதியை நேரில்கூட பார்த்தது இல்லை”.. பாலியல் புகார் விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்த ஸ்ரீரெட்டி

உதயநிதி மீதான பாலியல் புகார் விவகாரத்தில் அப்படியே மாற்றிப் பேசியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

Recommended Video

‘உதயநிதியை நேரில்கூட பார்த்தது இல்லை”.. அந்தர்பல்டி அடித்த ஸ்ரீரெட்டி

சென்னை: நடிகர் உதயநிதியை நான் நேரில் பார்த்ததுகூட கிடையாது எனக் கூறி, தான் முன்பு கூறிய பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் திடீர் அந்தர்பல்டி அடித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

சர்ச்சைகளுக்குப் பேர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பலர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார்.

அருவருக்கத்தக்க பதிவுகள்

அருவருக்கத்தக்க பதிவுகள்

இதுவரை தான் கூறிய புகார்கள் தொடர்பாக அவர் ஆதாரங்கள் எதுவும் வெளியிட்டதில்லை. ஆனாலும் தொடர்ந்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் அருவருக்கத்தக்க பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சமயங்களில் அவரது பதிவுகள் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது.

அமைதி

அமைதி

கிளைமாக்ஸ் என்ற தெலுங்குப் படமொன்றைத் தவிர ஸ்ரீரெட்டி கையில் வேறு படங்கள் ஏதும் இல்லை. அப்படத்திலும் சர்ச்சை நடிகையாகவே அவர் நடிக்க இருக்கிறார். சென்னையில் வீடு வாங்கி செட்டில் ஆகி விட்ட ஸ்ரீரெட்டி சமீபகாலமாக யார் மீதும் எந்தப் பாலியல் புகாரும் கூறாமல் இருந்தார்.

உதயநிதி பற்றி சர்ச்சைப் பதிவு

உதயநிதி பற்றி சர்ச்சைப் பதிவு

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "ஹாய் தமிழ் நடிகர் உதயநிதி ஸ்டாலின்..மூன்று வருடத்திற்கு முன்னால் ஹைதராபாத்தில் நடைபெற்ற "கதிர்வேலன் காதல்" படத்தின் படப்பிடிப்பின் போது நாமிருவரும் நடிகர் விஷால் ரெட்டி மூலம் சந்தித்தோம்.

ஏமாற்றி விட்டீர்கள்

ஏமாற்றி விட்டீர்கள்

அதையடுத்து நீங்கள் எனக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு கிரீன் பார்க் ஹோட்டலில் இரவு முழுவதும் என்னுடன் உறவில் இருந்தீர்கள். அதன் பிறகும் நாம் நிறைய செய்திருக்கிறோம். ஆனால், தற்போது வரை எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை.

பரபரப்பு

பரபரப்பு

நிச்சயம் நீங்கள் என்னுடன் இருந்ததை மட்டும் மறந்திருக்க மாட்டீர்கள்" எனக் கூறி இருந்தார். அதோடு கடைசியாக, ‘நீங்கள் மிகவும் சிறந்தவர்' எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். உதயநிதி தற்போது திமுக இளைஞரணித் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். எனவே ஸ்ரீரெட்டியின் இந்தப் பதிவு திரையுலகில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீரெட்டி அந்தர்பல்டி

ஸ்ரீரெட்டி அந்தர்பல்டி

இந்தப் பதிவின் தொடர்ச்சியாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விவரமாக பேசப் போவதாக ஸ்ரீரெட்டி அறிவித்தார். எனவே, உதயநிதி பற்றி அவர் ஏதோ ஆதாரம் வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்ரீரெட்டி திடீரென அந்தர்பல்டி அடித்து விட்டார்.

களங்கம் ஏற்படுத்த முயற்சி

களங்கம் ஏற்படுத்த முயற்சி

அப்போது அவர், "உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு, எனது கணக்கு இல்லை போலியான கணக்கு, உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்" என ஸ்ரீரெட்டி அப்போது தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X