கண்ட கனவு நிறைவேறப் போகும்போது அதை பார்க்காமலேயே சென்ற ஸ்ரீதேவி #sridevi
Recommended Video

மும்பை: நடிகை ஸ்ரீதேவி நீண்ட காலமாக கண்ட கனவு நிறைவேறப் போகும்போது அதை பார்க்காமலேயே இறந்துவிட்டார்.
உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54.
ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்து திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குஷி
மூத்த மகள் ஜான்வி கபூர் தான் இல்லாமல் இருக்க மாட்டார் என்று ஸ்ரீதேவி அடிக்கடி சொல்வார். ஆனால் இளைய மகள் குஷி தைரியசாலி, தன்னை தானே கவனித்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டாள் என்றும் அவர் தெரிவித்தார்.

படம்
மகள் ஜான்வியை தன்னை போன்று ஒரு நடிகையாக்கி பார்க்க வேண்டும் என்று ஸ்ரீதேவி நீண்ட காலமாக ஆசைப்பட்டார். ஜான்விக்கும் நடிப்பு மீது ஆர்வம் இருந்தது.

முதல் படம்
ஜான்வி கபூர் தடக் என்ற இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தான் அவர் நடிக்கும் முதல் படம். மகள் நடிகையான பூரிப்பில் இருந்தார் ஸ்ரீதேவி.

மரணம்
மகளின் படத்தை பார்க்காமலேயே ஸ்ரீதேவி இறந்துவிட்டார். அவர் நீண்ட காலமாக கண்ட கனவு நிறைவேறும்போது அதை பார்க்காமலேயே அவர் சென்றுவிட்டார்.


Click it and Unblock the Notifications











