Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
'புலி' பட தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீதேவி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்
மும்பை: தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கி குறித்து நடிகை ஸ்ரீதேவி புலி பட தயாரிப்பாளர்கள் மீது மும்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
பாலிவுட்டில் செட்டில் ஆன ஸ்ரீதேவி பல ஆண்டுகள் கழித்து விஜய்யின் புலி படம் மூலம் கோலிவுட்டுக்கு திரும்பி வந்தார். புலி படத்தில் ஹீரோயின்களான ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகாவை விட ஸ்ரீதேவிக்கு தான் சம்பளம் அதிகம் என்று கூறப்பட்டது.
ஸ்ரீதேவிக்கு ரூ.5 கோடி சம்பளமாக அளிக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் புலி பட தயாரிப்பாளர்கள் அவருக்கு பேசிய சம்பளத்தில் ரூ. 50 லட்சம் பாக்கி வைத்துள்ளார்களாம்.
இதையடுத்து சம்பள பாக்கியை வாங்கித் தருமாறு கூறி புலி பட தயாரிப்பாளர்களான ஷிபு தமீன்ஸ் மற்றும் பி.டி. செல்வகுமார் ஆகியோர் மீது ஸ்ரீதேவி மும்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர்கள் அந்த புகார் மனுவை தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷிபு தமீன்ஸ் தெரிவித்துள்ளார்.