Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஶ்ரீதேவிக்கு இப்படி ஒரு திறமையா? ஏலத்திற்கு வருகிறது அவர் வரைந்த ஓவியம்!
Recommended Video
மும்பை : நடிகை ஶ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாய் நட்சத்திர ஹோட்டலில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஶ்ரீதேவியின் உடல் பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு மும்பை கொண்டுவரப்பட்டு நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஶ்ரீதேவி ஓவியம் வரைவதிலும் அதிகமாக ஆர்வம் காட்டினாராம். அவர் வரைந்த ஓவியம் துபாயில் நடக்கவிருக்கும் ஏலத்தில் வைக்கப்பட இருக்கிறது.
ஶ்ரீதேவி
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தமிழ், இந்தி உள்ளிட்ட சினிமா துறையில் இருந்தவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கி, பின் ஹீரோயினாகி ரசிகர்கள் மனதைக் கவர்ந்து பல ஆண்டுகள் முன்னணி நடிகையாக விளங்கினார்.
மறைவு
ஶ்ரீதேவியின் திடீர் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த நிலையில் நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நிதி திரட்டுவதற்காக
தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக ஸ்ரீதேவி தான் வரைந்த ஒரு ஓவியத்தை கொடுத்துள்ளார். அது விரைவில் துபாயில் ஏலத்திற்கு வரவுள்ளது. 10 லட்ச ரூபாய்க்கும் மேல் அது விலைபோகலாம் என கூறப்படுகிறது.
ஓவியர் ஶ்ரீதேவி
ஸ்ரீதேவி சிறந்த நடிகை மட்டுமின்றி நன்றாக ஓவியம் வரைவார். ஶ்ரீதேவி வரைந்து ஏலத்திற்கு வரும் ஓவியம் நடிகை சோனம் கபூரின் முதல் படமான 'சாவரியா' படத்தைப் பார்த்து ஸ்ரீதேவி வரைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வரைந்த பல ஓவியங்களைச் சேமித்து வைத்துள்ளார்.
ஓவியங்கள்
நடிப்புக்கு அடுத்தபடியாக, அவர் விருப்பமாகச் செய்யும் வேலை ஓவியம் வரைவது. முந்நூறு படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் ஶ்ரீதேவி பல ஓவியங்களையும் வரைந்து சேகரித்து வைத்திருக்கிறாராம்.
போனி கபூர்
ஶ்ரீதேவி தினமும் மாலை வேளைகளில் 4 முதல் 5 மணிநேரம் பெயின்டிங் செய்வாராம். வீட்டில் தனது மகள்களைப் பார்த்துக்கொண்டே இதிலும் ஈடுபடுவாராம். கணவர், பிள்ளைகளுக்கு அடுத்து ஶ்ரீதேவிக்கு பிடித்தமானது ஓவியம் வரைவது தான் என அவரது கணவர் போனி கபூரே கூறியிருக்கிறார்.