Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்ட ஸ்ரீதேவி: வியந்த பாலிவுட் #Sridevi
Recommended Video
மும்பை: ஸ்ரீதேவி வழக்கத்திற்கு மாறாக ஒரு முறை நடந்தது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.
இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் பாலிவுட்டில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீதேவி. அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து மாம் என்ற படத்தில் நடித்தார்.
மாம் படம் இங்கிலிஷ் விங்கிலிஷ் போன்று ஓடவில்லை.
படப்பிடிப்பு
படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீதேவி எப்பொழுதும் அமைதியாக இருப்பார். யாருடனும் அவ்வளவாக பேச மாட்டார். ஆனால் மாம் படத்தில் நடிக்கும் போது மட்டும் ஸ்ரீதேவி அப்படி இல்லை.
தாய்
மாம் படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக நடித்தவர் பாகிஸ்தானை சேர்ந்த சஜல் அலி. சஜல் அலி அம்மா செல்லம். படப்பிடிப்பு நடந்தபோது சஜல் அலியின் தாய் இறந்துவிட்டார்.
அழுகை
பாகிஸ்தானில் இருந்து ஸ்ரீதேவிக்கு போன் செய்த சஜல் அலி என் அம்மா இறந்துவிட்டார்கள் என்று கூறி கதறி அழுதுள்ளார். ஸ்ரீதேவி அவருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார்.
அம்மா
தாயை இழந்த சஜல் அலியை தன் மகள் போன்று பார்த்துக் கொண்டார் ஸ்ரீதேவி. படப்பிடிப்பில் யாருடனும் நெருங்கிப் பழகாத ஸ்ரீதேவி சஜல் அலியை தனது 2 மகள்களோடு சேர்த்து மூன்றாவது மகளாகவே பார்த்தது அனைவரையும் வியக்க வைத்தது.
மரணம்
ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த சஜல் அலி மீண்டும் என் அம்மா இறந்துவிட்டார் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சஜல் ஸ்ரீதேவியை தனது சொந்த அம்மாவாகே பார்த்தார்.