Don't Miss!
- News உங்கள் வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டால் என்ன செய்வது? உங்களால் வாக்களிக்க முடியுமா! எளிய விளக்கம்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'புலி' படத்தில் என் காட்சிகள் பலவற்றை நீக்கிவிட்டார்களே: கோபத்தில் ஸ்ரீதேவி?
சென்னை: புலி படத்தில் தான் நடித்த காட்சிகளில் பலவற்றை நீக்கியுள்ளதால் ஸ்ரீதேவி கோபத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படம் மூலம் ஸ்ரீதேவி பல காலம் கழித்து மீண்டும் கோலிவுட் வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. படத்தில் நடிக்க ஹீரோயின்களான ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா ஆகியோரை விட ஸ்ரீதேவிக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிம்புதேவன் மீது ஸ்ரீதேவி கோபமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
டப்பிங்
ஸ்ரீதேவி தமிழ் படங்களில் நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவருக்கு டப்பிங் பேச ஆள் தேடியுள்ளார் சிம்புதேவன். இது குறித்து அறிந்த ஸ்ரீதேவி எனக்கு டப்பிங்கிற்கு ஆள் எதற்கு நானே பேசுகிறேன் என்றுள்ளார்.
காட்சிகள்
ஸ்ரீதேவி தான் நடித்த காட்சிகளுக்கு இரண்டே நாட்களில் டப்பிங் பேசி முடித்துள்ளார். டப்பிங் பேசுகையில் தான் தான் நடித்த பல காட்சிகள் நீக்கப்பட்டதை தெரிந்து கொண்டார்.
கோபம்
நான் அத்தனை நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்தால் நீங்கள் பல காட்சிகளை எனக்கு தெரியாமல் எதற்காக நீக்கினீர்கள் என்று சிம்புதேவனிடம் ஸ்ரீதேவி கேட்டுள்ளார்.
ஸ்ரீதேவி
புலி படத்தில் ஸ்ரீதேவி கெட்ட ராணியாக நடித்துள்ளாராம். தான் பார்த்து பார்த்து நடித்த காட்சிகளில் பலவற்றை இப்படி நீக்கிவிட்டார்களே என்ற போகத்தில் உள்ளாராம் ஸ்ரீதேவி.