Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
திரைத் துளி
நடிகை ஸ்ரீவித்யாவுக்கு சொந்தமான பங்களாவை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றஉத்தரவை எதிர்த்து அவரது மாஜி கணவர் ஜார்ஜ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது.
கேரளத்தைச் சேர்ந்த நடிகை ஸ்ரீவித்யா, தனது ஊரைச் சேர்ந்த ஜார்ஜை மணந்தார். இதை தொடர்ந்து இருவரும்சென்னை மகாலிங்கபுரத்தில் பங்களாவில் குடியிருந்தனர்.
அதன்பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஸ்ரீவித்யா கணவரைப் பிரிந்தார், வீட்டைவிட்டும் வெளியேறினார். ஆனால், பங்களாவை தன்னிடம் ஒப்படைக்குமாறு ஸ்ரீவித்யா கேட்டார். தர மறுத்தார்ஜார்ஜ்.
இதை தொடர்ந்து அந்த பங்களாவை சினிமா சூட்டிங்குக்கு வாடகைக்கு விட்டு வந்தார் ஜார்ஜ். இதையடுத்து, அந்தபங்களா தனது வருமானத்தில் கட்டப்பட்டதாகவும், இதனால் அதை தன்னிடம் ஒப்படைக்கக் கோரியும், சூட்டிங்வாடகை மூலம் கிடைத்த பணத்தையும் தன்னிடம் ஒப்படைக்கக் கோரியும் ஸ்ரீவித்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதே நேரத்தில் இது என் வருமானத்தில் கட்டப்பட்டது, இதனால் வீடு எனக்கே சொந்தம் என்று என்று கூறிஜார்ஜும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், வீட்டை ஸ்ரீவித்யாவிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில்ஸ்ரீவித்யா வருமான வரிக் கட்டத் தவறியதால், வீட்டையே ஜப்தி செய்யப் போவதாக வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதியின் தீர்ப்பையும், வருமான வரித்துறையின் நோட்டீஸை எதிர்த்தும்உயர் நீதிமன்றதிலேயே ஜார்ஜ் அப்பீல் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த இரு மனுக்களையும் உயர் நீதிமன்றடிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜார்ஜ் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்தமனுவைய உச்ச நீதிமன்றம் இப்போது தள்ளுபடி செய்துவிட்டது.
இதனால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டை ஸ்ரீவித்யாவிடம் ஒப்படைக்க வேண்டிய நிலைக்கு ஜார்ஜ்தள்ளப்பட்டுள்ளார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?