திரைத் துளி
சென்னை:
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், சென்னையில், கட்டியுள்ள திருமண மண்டபத்தை சென்னை மேயர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
நடிகர் விஜய் ஜே.எஸ்.என்ற பெயரில் சென்னை அருகே உள்ள வடபழனியில் சொந்தமாகத் திருமண மண்டபம் கட்டியுள்ளார். தனது மகன் பெயரில் கட்டியுள்ளஇந்த மண்டபத்தை வரும் 14 ம் தேதி சென்னை மேயர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அன்றைய தினம் 7 ஏழை ஜோடிகளுக்கு அவர் இலவச திருமணமும் நடத்தி வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு பட அதிபர் ஏவி.எம்.சரவணன் தலைமைதாங்குவார். இவ்விழாவில் சினிமா நடிகர்- நடிகைகள் உள்பட திரையுலக பிரமுகர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











