Don't Miss!
- Automobiles உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
- Lifestyle Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
- News திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
'ரோர், தி டைகர் ஆப் சுந்தர்பன்': தேசிய விலங்கிற்காக ஒரு படம்!
மும்பை: இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், அவ்வினமே அழிவின் பிடியில் உள்ளது என்பது நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியான விஷயம்தான்.
அப்படிப்பட்ட புலியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து வர இருக்கும் திரைப்படம்தான் "ரோர்- தி டைகர் ஆப் சுந்தர்பன்".
புலிகளின் சரணாலயம்:
கமல் சாதனாக் இயக்கியுள்ள இப்படம் முழுக்க, முழுக்க புலிகளின் சரணாலயமாக விளங்கும் சுந்தரவனக் காடுகளை அடிப்படையாக கொண்ட படமாகும்.
புகைப்பட நிருபர்:
உதய் என்பவர் ஒரு இளம் புகைப்பட நிருபர். அவருக்கு புலிகளின் காடு என அழைக்கப்படும் சுந்தரவனக் காடுகளில் பணி தொடர்பான ஒரு வேலை வருகின்றது.
வெள்ளைப் புலிக்குட்டி:
அந்நிலையில்தான் அங்கு வேட்டைக்காரர்களின் வலையில் சிக்கிய வெள்ளை வங்காள புலிக்குட்டி ஒன்றை காப்பாற்றி தன்னுடைய இடத்திற்கு கொண்டு வந்து விடுகின்றார்.
பீதியில் கிராம மக்கள்:
இந்நிலையில் போகப்போக கிராம மக்களிடம் அதனால் பீதி ஏற்படுகின்றது. அவர்களை அமைதிப்படுத்த வனத்துறையினர் அந்த குட்டி புலியை மீண்டும் எடுத்துச் சென்று விடுகின்றனர்.
தாய் புலி:
இந்நிலையில் அக்குட்டியின் ரத்த வாசனை மூலமாக குட்டியின் இடத்தை தெரிந்து கொண்ட அப்புலிக் குட்டியின் தாய் உதயின் தங்குமிடத்திற்கே வந்து விடுகின்றது.
உதயைக் கொல்லும் புலி:
அங்கு தன்னுடைய குட்டி இல்லாத காரணத்தினால் கோபம் கொள்ளும் தாய்ப் புலி உதயைக் கொன்று அவருடைய உடலுடன் மாயமாகி விடுகின்றது.
சகோதரர் கேப்டன்:
உதயின் சகோதரர் ஒரு கமாண்டோ படையின் கேப்டன். அவர் தன்னுடைய சகோதரனின் உடலைத் தேடி சுந்தர்பன் காட்டிற்கு வருகின்றார்.
அமைதி காக்கும் மக்கள்:
கிராம மக்கள் யாரும் பதில் சொல்லாத நிலையில், அவருக்கும், வனப்பகுதியின் பாதுகாப்பாளருக்கும் மோதல் ஏற்படுகின்றது. அப்பாதுகாப்பாளரான பெண், அந்த வழக்கு முடிவடைந்துவிட்டதாகவும், உதயின் சடலத்தை மீட்க மிகவும் அபாயகரமான அக்காட்டுப் பகுதிக்கு வேறு யாரையும் அனுப்ப இயலாது என்றும், தான் புலிகளை பாதுகாக்கத்தான் அங்கு இருப்பதாகவும் கூறுகின்றார்.
காட்டுக்குள் பயணம்:
ஆத்திரமடையும் உதயின் சகோதரர், இந்த விஷயத்தை தானே கையில் எடுக்க முடிவு செய்கின்றார். தன்னுடைய டீமுடன், உள்ளூர் கைடான மது மற்றும் புலிகள் பற்றி அறிந்த ஜும்பா என்பவருடன் அந்த வெள்ளைப் புலியைக் கண்டுபிடித்து கொல்லச் செல்கின்றார்.
மிரட்டும் சுந்தரவனக் காடு:
சுந்தரவனக் காட்டின் சதுப்பு நில மையப்பகுதிக்கு பயணம் செய்யும் போதுதான், அதுவரை பழங்கதைகளில் மட்டுமே கேட்டறிந்த பல அபூர்வமான விஷயங்களைக் காண்கின்றனர்.
புத்திசாலிப் புலி:
அந்த வெள்ளை பெண் புலி, ஒவ்வொரு முறையும் அவர்களை தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றுகின்றது. இந்நிலையில் அவர்களுடன் இருக்கும் வேட்டைக்காரர் பீரா, தனது திறமையை ஊருக்கு நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக இதைக் கருதுகின்றார்.
வேட்டையாகப் போகும் வேட்டைக்காரர்கள்:
அந்த ராயல் பெங்கால் புலியை வீழ்த்தி ஊர் மக்களிடம் தனது திறமையை நிரூபிக்க முடிவு செய்கிறார். இதற்காக திட்டமும் தீட்டுகின்றார். ஆனால் உண்மையில் அந்தப் புலியிடம் சிக்கப் போவது அவர் உள்ளிட்டமற்றவர்கள்தான் என்பது அவர்களுக்கு அப்போது தெரியவில்லை. மீதியை செப்டம்பரில் திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்!