Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சுசிலீக்ஸில் புது டுவிஸ்ட்: சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு மட்டும் அல்ல இமெயில்களும்...
சென்னை: தனது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாடகி சுசித்ரா போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் தனுஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாக சுசித்ரா தெரிவித்தார். #suchileaks என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. இந்நிலையில் சுசித்ரா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
சுசித்ரா
மார்ச் மாதம் 2ம் தேதி யாரோ என் ட்விட்டர் கணக்கை(@suchitrakarthik) ஹேக் செய்து திரையுலக பிரபலங்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கமெண்ட்டுகளை போட்டனர்.
மிரட்டல்
திரையுலக பிரபலங்களின் மேலும் பல புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடப்போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. அப்போது எனக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் ட்விட்டர் இந்தியா தலைவரை அணுகி என் ட்விட்டர் கணக்கை என் கணவர் கார்த்திக் குமார் முடக்கினார்.
ட்விட்டர்
ட்விட்டரில் என் பெயரில் 40-50 போலி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. அவை அனைத்திலும் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இமெயில்
ட்விட்டர் கணக்கு போக என்னுடைய இமெயில்களும் ஹேக் செய்யப்பட்டது. அவற்றில் இருந்து திரையுலக பிரபலம் ஒருவருக்கு அசிங்கமான இமெயில்கள் சென்றுள்ளன. இத்தனைக்கும் காரணமானவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று சுசித்ரா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.