Just In
- 2 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 2 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 4 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 5 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
5 மாநில சட்டசபைத் தேர்தல்... காங்கிரஸ் கட்சிக்கு கஷ்டம் தான்... ஏபிபி சி-வோட்டர் அதிரடி சர்வே..!
- Automobiles
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மவுசை நகர்த்த தெரிஞ்சவங்கெல்லாம் விமர்சனம் பண்றாங்களே...! - சுகாசினி திடீர் ஆவேசம்
மவுசை நகர்த்தத் தெரிஞ்சவங்கெல்லாம் சினிமா விமர்சனம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இதை அனுமதிக்கக் கூடாது என்று நடிகை சுகாசினி ஆவேசமாகப் பேசினார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓ காதல் கண்மணி' படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மணிரத்னம், பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகை சுஹாசினி, நாயகன் துல்கர் சல்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது சுகாசினி பேசும்போது, ‘‘ஒரு திரைப்படத்தை விமர்சிக்க பத்திரிகையாளர்களாகிய உங்களுக்குத்தான் உரிமையுண்டு.
ஏன்னா உங்களுக்கு அனுபவம் இருக்கு. அதற்கான தகுதியுமிருக்கு.
ஆனால் இப்போவெல்லாம் சோஷியல் மீடியாவில் எல்லாருமே விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்தத் தெரிஞ்சவங்க எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.
இதையெல்லாம் பத்திரிகையாளர்களாகிய நீங்க அனுமதிக்கக் கூடாது. இதை தடுக்கணும். இனி பத்திரிகையாளர்கள் மட்டும்தான் சினிமா விமர்சனம் செய்யணும்,'' என்றார் சுஹாசினி.
அப்படியெல்லாம் ஒரேயடியாச் சொல்ல முடியாதுங்க.. பணம் கொடுத்து படம் பாக்கிற அத்தனை பேரும் ஏதோ ஒரு வகையில் விமர்சகர்தான்!