Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
300 சி ஓகே... ஆனா சுந்தர் சிக்கு இன்னும் ஹீரோ கிடைக்கலையாமே…?
தமிழ்நாட்டிலேயே மிக பிரம்மாண்ட படமாக முந்நூறு கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க இயக்குனர் ரெடி... தயாரிப்பாளர் ரெடி... கதை ரெடி... ஆனால் ஹீரோ? யாரும் இல்லை.
சுந்தர்.சி இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு மெகா பட்ஜெட் படம் திட்டமிட்டு வருகிறார்கள். இதற்காக சுமார் 6 மாதங்களாக ஸ்க்ரிப்ட் தயார் செய்துவருகிறார் சுந்தர்.சி. படத்திற்கு ஹீரோவாக சூர்யா, விஜய், மகேஷ்பாபு ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. ஆனால் இவர்கள்
மூவருமே மறுத்துவிட்டதாக செய்திகள் வருகின்றன.
மகேஷ்பாபு தனக்கு இருக்கும் வரிசையான கமிட்மெண்டுகளை காரணம் காட்டி முடியாது என சொல்லிவிட்டாராம்.
விஜய்யும் இதே காரணம் சொல்லி ஒதுங்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதுவும் தோல்வியில் முடிந்துவிட்டதாம். சுமார் ஒரு வருட கால்ஷீட் கேட்கிறாராம் சுந்தர்.சி.
மேலும் இத்தனை பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து அது சுமாராகி விட்டால் இந்திய அளவில் பெயர் போய்விடும். அதற்கு பதிலாக இருப்பதை பார்த்துவிட்டு போகலாம் என்ற ரீதியில் யோசிக்கிறார்கள் என்கிறது சுந்தர்.சி தரப்பு.