சன்னி லியோன் சர்பிரைஸுன்னு சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா?
Recommended Video

மும்பை: நடிகை சன்னி லியோன் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.
கணவர் டேனியல் வெபருடன் மும்பையில் செட்டில் ஆகி பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சன்னி லியோன். அவரும், வெபரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர். அந்த குழந்தைக்கு நிஷா கவுர் வெபர் என்று பெயர் வைத்தனர்.
இந்நிலையில் அவர்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர்.

டேனியல்
சன்னி லியோனும், டேனியல் வெபரும் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர். குழந்தைகளுக்கு ஆஷர் சிங் வெபர், நோவா சிங் வெபர் என்று பெயர் வைத்துள்ளனர்.

குடும்பம்
டேனியல், நிஷா மற்றும் இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு புதுவரவுகள் குறித்து உலகிற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சன்னி.

மகிழ்ச்சி
எங்கள் வாழ்க்கையில் 3 அதிசயங்கள்(குழந்தைகள்) இருப்பதற்கு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் குடும்பம் முழுமை அடைந்துவிட்டது. ஆஷர் மற்றும் நோவா எங்களின் ரத்தம். அவர்கள் பிறக்கும் வரை அவர்களை சுமக்க ஒரு தேவதையை கடவுள் அனுப்பினார் என்கிறார் சன்னி.

குழந்தைகள்
யார் கண்டால் திடீர் என்று ஒரு நாள் நான் கையில் குழந்தையுடன் வந்து நிற்பேன் என்று சன்னி கூறிய சில நாட்களிலேயே நிஷாவுடன் வந்தார். தற்போது ஆஷர் மற்றும் நோவாவுடன் வந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிஷாவை தத்தெடுத்த சன்னி தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











