Just In
- 52 min ago
செம அதிர்ஷ்டம்.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் ஹீரோயின்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- 1 hr ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 2 hrs ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 2 hrs ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
Don't Miss!
- Finance
வோடபோனின் சூப்பர் ஆஃபர்.. 50ஜிபி டேட்டா ப்ரீ.. ஜியோ, ஏர்டெல்லில் என்ன சலுகை.. எது பெஸ்ட்!
- News
புதுச்சேரி காங். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்
- Sports
ரஹானே உருவாக்கிய 6+5 பார்முலா.. வேறு வழியின்றி விட்டுக்கொடுத்த கோலி.. இந்திய அணியில் செம டிவிஸ்ட்
- Lifestyle
கர்ப்பகாலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? எப்படி பாதுகாப்பா வைச்சுக்கணும் தெரியுமா?
- Automobiles
பிஎம்டபிள்யூ ஐ3 காரின் நிலைமை என்னவாக போகிறதோ! மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக பெறும் மின்சார கார்...
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காதலன் கொடுமை தாங்க முடியாமல் விமல் பட நடிகை தற்கொலை

சென்னை: காதலன் கொடுமை தாங்க முடியாமல் துணை நடிகை யாசிகா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பூரை சேர்ந்தவர் மேரிஷீலா ஜெபராணி என்கிற யாசிகா(21). துணை நடிகை. தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள அவர் விமலின் மன்னர் வகையறா படத்திலும் நடித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி நடித்து வந்தார் யாசிகா.

யாசிகா
யாசிகாவுக்கும் செல்போன் சர்வீஸ் கடையில் வேலை பார்த்த பெரம்பூரை சேர்ந்த அரவிந்த் என்கிற மோகன்பாபுவுக்கும்(22) காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து திருமணம் செய்யாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே கடந்த 3 நாட்களுக்கு முன்பு மோகன் பாபு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தற்கொலை
காதலன் பிரிந்து சென்ற சோகத்தில் இருந்த யாசிகா நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யாசிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கு
யாசிகாவின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்கொலை செய்யும் முன்பு யாசிகா தன் அம்மாவுக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பியது தெரிய வந்துள்ளது.

அம்மா
நம்பி வந்த என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி கொடுமைப்படுத்திய மோகன்பாபுவுக்கு நான் இறந்த பிறகு சரியான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் அம்மா என்று யாசிகா வாட்ஸ்ஆப்பில் தனது தாய்க்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.