Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தியன் 2 பட விவகாரம்.. உச்சநீதிமன்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமித்த உயர்நீதிமன்றம்!
சென்னை: இந்தியன் 2 பட விவகாரத்தில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ளது.
அசுரன் சொல்லும் அன்பே சிவம்...கமல் – வெற்றிமாறன் காம்போவை கமெண்ட் செய்த கஸ்தூரி
இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
பெரும் எதிர்பார்ப்பு
தேசிய விருது வென்ற இந்தியன் படத்திற்கு பிறகு 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷங்கர் - கமல் கூட்டணி இந்தியன் 2 படத்திற்கு இணைவதை அறிந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். பாதி படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், திடீரென படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது பெரும் பிரச்சனையை உருவாக்கி உள்ளது.
கிடப்பில் போட்டாச்சு
இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் ஆரம்பித்த பிரச்சனை படத்தையே கிடப்பில் போடும் நிலைமைக்கு தள்ளியது. நடிகர் கமல் பிக் பாஸ், அரசியல், விக்ரம், பாபநாசம் 2 என பிசியாகி விட்டார்.
அடுத்த படங்கள்
இயக்குநர் ஷங்கரும் இந்த விவகாரத்தில் இருந்து விலகி அடுத்தடுத்த படங்கள் மீது கவனத்தை செலுத்த முடிவு செய்துள்ளார். டோலிவுட் நடிகர் ராம்சரணின் புதிய படத்தையும், ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் ரீமேக்கையும் இயக்க முடிவு செய்துள்ளார்.
லைகா வழக்கு
இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகக் கூடாது என லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஏற்கனவே தனி நீதிபதி தெரிவித்திருந்தார்.
Recommended Video
பேச்சுவார்த்தையில் பலனில்லை
இந்நிலையில் இரு தரப்பும் சுமூக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். ஆனால் அதில் தீர்வு எட்டப்படவில்லை என இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்தியஸ்தர்
அதில், இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சினையில் தீர்வுகாணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மத்தியஸ்த பேச்சுவார்த்தை முடிந்து அதில் எடுக்கப்படும் முடிவை ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.