Just In
- 1 hr ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 6 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 7 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
குடியரசு தினத்தன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடக்குமா.. சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
144 தயாரிப்பாளர்களின் காப்பீடு கணக்குகள் அழிப்பு... தயாரிப்பாளர் சங்கம் மீது சுரேஷ் காமாட்சி வழக்கு!
சென்னை: கலைப்புலி தாணு உள்ளிட்ட 144 முன்னணி தயாரிப்பாளர்களின் காப்பீட்டு கணக்குகளை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் அழித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் அனைத்து உறுப்பினர்களும் பணம் செலுத்தி காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளனர்.
ஆனால் விஷால் தலைமையில் புதிய நிர்வாகிகள் வந்த பிறகு, குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த காப்பீட்டை ரத்து செய்து, அவர்கள் கணக்குகளையே அழித்துள்ளனர்.
இப்படி காப்பீட்டை இழந்த தயாரிப்பாளர்கள் பலரும் கலைப்புலி தாணு, ஆர்பி சவுத்ரி, சுரேஷ் காமாட்சி பிரபலமானவர்கள், முன்னணி தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சுரேஷ் காமாட்சி கூறுகையில், "தயாரிப்பாளர்கள் சிலரின் காப்பீட்டுக் கணக்குகளை விஷால் நிர்வாகம் அழித்துவிட்டதாகத் தகவல் கிடைத்ததும், அதுகுறித்து எழுத்துப் பூர்வமாக தெரிந்து கொள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு இமெயில் அனுப்பினேன். அதற்கு எனது கணக்கு அழிக்கப்பட்டு விட்டதாக பதில் வந்தது.
எதற்காக இந்த காப்பீட்டுக் கணக்கு அழிக்கப்பட்டது? எங்களிடம் பணம் பெற்றுக் கொண்டுதான் காப்பீட்டு பாலிசி கொடுத்தார்கள். இப்போது எங்களைக் கேட்காமலேயே அழித்துள்ளனர். இதை எதற்காகச் செய்திருக்கிறார்கள்? கணக்கு அழிக்கப்பட்ட தயாரிப்பாளர்களில் பலர் மூத்தவர்கள். அவர்களுக்கு உடல் நீதியான பிரச்சினை வரும்போது, பணம் செலுத்தி பெற்ற காப்பீட்டு கணக்கு இல்லாத நிலை உருவாகியுள்ளது.
இது திட்டமிட்ட மோசடி. எனவேதான் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன்," என்றார்.