10 நாடுகளுக்குப் பறக்கும் சூர்யா.. கே.வி.ஆனந்த் பட ஷூட்டிங்!
Recommended Video

சென்னை : சூர்யாவின் 36-வது படமான 'NGK' படம் தற்போது தயாராகி வருகிறது. 37-வது படத்திற்காக, சூர்யாவை 10 நாடுகளுக்கு அழைத்து செல்ல இருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்கு பின் சூர்யா தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அரசியல் சார்ந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி அப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
சூர்யா 37-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக 10 நாடுகளுக்கு சூர்யாவை அழைத்துச் செல்ல இருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். பல நாடுகளில் நடப்பது போல இந்தப் படம் உருவாக இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











