Don't Miss!
- Sports
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்.. ரசிகர்களுக்கு பிசிசிஐ தந்த மெகா சர்ஃப்ரைஸ்.. வரலாற்று தொடராக மாறுகிறது
- News
ரயிலில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பெண்.. காரணம் என்ன?
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூர்யா எனக்கு காருக்குள்ள 4 மணி நேரம் ஆக்டிங் class எடுத்தார்!
சென்னை : தெலுங்கில் மிக பிரபலமான நடிகராக உள்ள ராணா தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார்
அஜித்துடன் இணைந்து ஆரம்பம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்
பாகுபலியால் இந்திய அளவில் பிரபலமடைந்த நடிகர் ராணா சூர்யா தனக்கு காருக்குள்ளே 4 மணி நேரம் ஆக்டிங் கிளாஸ் எடுத்ததாக பகிர்ந்துள்ளார்.
ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ள வெங்கட்பிரபுவின் படம்... அடுத்த அப்டேட்க்கு ரெடியா?

மிரட்டும் வில்லனாக
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகர் ராணா. ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லனாகவும் மிரட்டும் ராணா பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறி உள்ளார். லீடர் என்ற படத்தின் மூலம் முதன்முறையாக தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான ராணாவுக்கு அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
தமிழிலும் நேரடியாக சில திரைப்படங்களில் நடித்து இங்கும் பிரபலமாக உள்ளார். அந்த வகையில் அஜித் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ஆரம்பம் படத்தில் அஜித்தின் நண்பராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பல்லாலதேவா கதாபாத்திரத்திற்கு
இந்திய சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு சென்ற பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் பல்லாலதேவனாக நடித்து இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். பாகுபலியில் ராணா வில்லனாகவே நடித்திருந்தாலும் பல்லாலதேவா கதாபாத்திரத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

ரூரல் சப்ஜெக்ட்டை மையமாக வைத்து
ஆரம்பம் படத்தை தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி,பெங்களூரு நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா, கடான் உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் பீம்லா நாயக் படத்தில் பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் சமீபத்தில் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது சாய்பல்லவி உடன் இணைந்து விராட பருவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ரூரல் சப்ஜெக்ட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படம் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டு வருகிறது.

சூர்யாவின் 4 மணி நேரம் ஆக்டிங் க்ளாஸ்
இந்நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட விழாவில் பேசிய ராணா சில ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்த படத்தை பார்த்த சூர்யா என்னை காரில் அழைத்துச் சென்று சுமார் 4 மணி நேரம் ஆக்டிங் குறித்து க்ளாஸ் எடுத்தார். சூர்யா கொடுத்த அந்த ஆக்டிங் டிப்ஸ்தான் இப்பொழுது என்னை சிறந்த நடிகனாக உங்கள் முன் நிறுத்தியுள்ளது. டேனியல் சேகர், பல்லாலதேவன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை உங்களால் பார்க்க முடிகிறது என சூர்யாவுடனான பல வருட நட்பை பற்றி மேடையில் ராணா நெகிழ்ந்து பேசியுள்ளார்.