Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிங்கம் 3 டிசம்பரில் தொடங்கும் - சூர்யா
சென்னை: சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2 ம் தேதியில் தொடங்கும் என்று நடிகர் சூர்யா உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
சிங்கம், சிங்கம் 2 படத்தின் மாபெரும் வெற்றிகளைத் தொடர்ந்து சிங்கம் 3 படத்திற்கான வேலைகளை இயக்குநர் ஹரி தொடங்கியிருக்கிறார். கடந்த மாதமே தொடங்கும் என்று எதிர்பார்த்த சிங்கம் 3 யின் படப்பிடிப்பு சூர்யாவின் 24 படத்தால் தொடர்ந்து தள்ளிப் போனது.
சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 2 ம் தேதியில் இருந்து தொடங்கும் என்று படத்தின் நாயகன் சூர்யா உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் மலபார் கோல்டின் புதிய ஷோரூமை கோயம்புத்தூரில் திறந்து வைக்க நடிகர் சூர்யா வந்திருந்தார். விழாவில் சூர்யா பேசும்போது சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 2 ம் தேதியில் இருந்து தொடங்கும் என்று கூறினார்.
ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து 5 வது முறையாக சூர்யாவுடன் இணைந்து ஹரி பணியாற்றவிருக்கிறார். இந்தப் படத்திற்கான பணிகளை ஹரி ஏற்கனவே தொடங்கி விட்டார்.
முதல் 2 பாகங்களிலும் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா செட்டியே இந்தப் படத்திலும் ஜோடியாக தொடர்கிறார். அனுஷ்காவுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் இன்னொரு நாயகியாக சிங்கம் 3 யில் நடிக்கிறார்.
விரைவில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.