சூர்யா குடும்பம் ஓராயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது...சூரி புகழாரம்!

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருப்பவர் நடிகர் சூரி

வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்

இந்நிலையில் சமீபத்தில் பட விழா ஒன்றில் பேசிய சூரி, சூர்யா குடும்பம் ஓராயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது என புகழ்ந்து பேசியுள்ளார்.

காமெடியனாக புகழ் பெற்ற

காமெடியனாக புகழ் பெற்ற

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற வெண்ணிலா கபடி குழு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் சூரி அதற்கு முன்பாகவே பல படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து சென்றிருப்பார். சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வளர்ந்து கொண்டு உள்ளார்.

தனித்துவமான காமெடி

தனித்துவமான காமெடி

வெள்ளந்தியான பேச்சு யாரையும் காயப்படுத்தாத காமெடி என தனது தனித்துவமான காமெடியின் மூலம் தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவரின் காமெடிகள் பலவும் இன்றைய தலைமுறைகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.

ஹீரோவாக

ஹீரோவாக

இதுவரை காமெடியனாக வலம் வந்து கொண்டிருந்த சூரி இப்பொழுது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் இதில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க ஜிவி பிரகாஷின் தங்கை இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

3 கிராமங்களையும் தத்தெடுத்து

3 கிராமங்களையும் தத்தெடுத்து

காமெடியன் ஹீரோ என சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் சூரி சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் காமெடியனாக நடித்து உள்ளார். வழக்கம்போல ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த சூரி பட விழாவில் சூர்யா குடும்பம் ஓராயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது என புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் அதில் பேசிய சூரி சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மூலமாக பல இளைஞர்கள் நல்ல தரமான கல்வியைப் பெற்று பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த இடத்தில் உள்ளனர் ஜெய் பீம் படத்தில் இருளர்களின் வாழ்க்கையை கூறியதோடு 3 கிராமங்களையும் தத்தெடுத்து உள்ளார்.

Recommended Video

3 வது படிச்சா பொண்ணு இப்போ எனக்கு Jodi|Suriya Speech in Etharkkum Thunindhavan Trailer launch Event
ஓராயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது

ஓராயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது

இது சாதாரண விஷயம் அல்ல . திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சூர்யாவின் குடும்பம் ஓராயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது என நடிகர் சூர்யாவின் குடும்பத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார் சூரி. சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பையும் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பையும் சேவை நோக்கத்துடன் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X