திரையுலகினரின் வெள்ள நிவாரண நிதிப் படலம் ஆரம்பம்... சூர்யா - கார்த்தி 25 லட்சம், விஷால் 10 லட்சம்!
சென்னை: சினிமாக்காரர்கள் கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார்களே... இன்னும் ஏன் வெள்ள நிவாரண நிதி தரல என்று இணையத்திலும் சமூக வலைத் தளங்களிலும் பொங்கிக் கொண்டிருந்தவர்கள், இனி ஏன் இவர் தரல, அவர் தரல என கணக்கெடுக்க ஆரம்பிக்கப் போகிறார்கள்.
ஆம்.. திரையுலகினர் வெள்ள நிவாரண நிதியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

முதல் கட்டமாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் ஆதியோர் நிதியை வழங்கியுள்ளனர்.

சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து 25 லட்சம் ரூபாயும், விஷால் 10 லட்ச ரூபாயும் நடிகர் சங்கத்திடம் அளித்துள்ளார்கள்.

இந்தத் தொகை, நடிகர் சங்கம் மூலமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மற்ற முன்னணி நடிகர்களும் நாளையிலிருந்து வெள்ள நிவாரண நிதியை வழங்கவிருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











