Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாகுபலி 2-ல் ஸ்ரேயா, சூர்யா...?
எவ்வளவுதான் விளக்கம் சொன்னாலும் புரளிகளும் வதந்திகளும் திரையுலகில் ஓய்வதே இல்லை. அதிலும் பாகுபலி 2 -ஐப் பற்றி ஓயாத புரளிகள். ஒவ்வொரு முறையும் இயக்குநர் ராஜமௌலியே மறுத்தும் கூட, இந்த அக்கப்போர்கள் தொடர்கின்றன.
பாகுபலி 2 படம் தொடங்கும் முன்னமே, இந்தப் படத்துக்கு மூன்றாம் பாகம் தயாராவதாகச் சொன்னார்கள். அது தவறான செய்தி என்று இயக்குநர் தெரிவித்துவிட்டார்.
அடுத்து மாதுரி தீக்ஷித் நடிக்கிறார், அதுவும் அனுஷ்காவுக்கு அக்காவாக என்று நேற்றெல்லாம் ஒரு திரி பற்றிக் கொண்டிருந்தது. இன்று அதையும் பொய் என்று ராஜமவுலி சொல்லிவிட்டார். அனுஷ்காவுக்கு அக்கா பாத்திரமே இல்லை என்கிறார் அவர்.
இன்றைய புரளி... பாகுபலி 2-ல் கவுரவ வேடங்களில் ஸ்ரேயாவும் சூர்யாவும் நடிக்கிறார் என்பது. சூர்யா நடிக்கிறார் என்ற செய்தியை சூர்யாவே முன்பு மறுத்திருந்தார்.
அடுத்து ஸ்ரேயா என்ன சொல்லப் போகிறாரோ!