Don't Miss!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- News உலகத்திலேயே நடக்காதது.. மன்னிக்க முடியாதது- மதிமுக கணேசமூர்த்தி மரணம் படுகொலையே..தமிழிசை படு ஆவேசம்!
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ராஜபாட்டை படத்தை எடுத்து தவறு செய்துவிட்டேன்: சுசீந்திரன்
சென்னை: ராஜபாட்டை என்னும் படத்தை எடுத்து தவறு செய்துவிட்டதாக இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
வெண்ணிலா கபடுக் குழு மூலம் இயக்குனர் ஆனவர் சுசீந்திரன். நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு உள்ளிட்ட படங்களை இயக்கியவர். விஷ்ணு விஷாலை வைத்து அவர் இயக்கியுள்ள மாவீரன் கிட்டு நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திரையுலகம் பற்றி சுசீந்திரன் கூறுகையில்,
வெண்ணிலா கபடிக்குழு
நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட நல்ல படங்களை இயக்கியுள்ளேன். ஆனால் என் முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு தான் வெற்றியை பெற்றுத் தந்தது.
முன்னணி ஹீரோக்கள்
நான் முன்னணி ஹீரோக்கள் அல்லது மாஸ் ஹீரோக்களை வைத்து படம் பண்ணுவது இல்லை. ஏனென்றால் என்னிடம் அவர்களுக்கு ஏற்ற கதை இல்லை.
ராஜபாட்டை
நான் ஏற்கனவே ராஜபாட்டை என்னும் படத்தை இயக்கி தவறு செய்துவிட்டேன். அதற்கான விலையையும் கொடுத்துவிட்டேன். அந்த படத்திற்கு பிறகு யாருமே என்னை கண்டுகொள்ளவில்லை.
புதுமுகங்கள்
ராஜபாட்டை படத் தோல்வியால் கவலை அடைந்த தான் என்னை தேற்றிக் கொண்டு புதுமுகங்களை வைத்து படம் எடுத்து ரசிகர்களின் மனதை மீண்டும் கவர்ந்தேன்.