Don't Miss!
- News
திடீரென உதயநிதி கான்வாய்க்குள் புகுந்த வண்டி.. டக்கென சுதாரித்த ஓட்டுநர்..பெரும் விபத்து தவிர்ப்பு!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
தற்கொலை இல்லை..கொலை..சுஷாந்த் வழக்கில் திடீர் திருப்பம்..மருத்துவமனை ஊழியரின் பகீர் தகவல்!
மும்பை : பாலிவுட் நடிகர் சுஷாந் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை அது கொலை தான் என மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இத்தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.
சுஷாந்த் சிங்கிற்கு அவரது காதலி ரியா சக்கரவர்த்தி போதைப்பொருளை அதிக அளவு வாங்கிக்கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இது தொடர்பான வழக்கு ஒரு புறம் நடந்து வருகிறது.
காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்.. அடேங்கப்பா சரியான புளியங் கொம்பு தான் போல!

பாலிவுட் நடிகர் சுஷாந் சிங்
இந்நிலையில், சுஷாந்த் சிங்கை பிரேத பரிசோதனை செய்த ஊழியர், சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை அது கொலை என கூறியுள்ளார். சுஷாந்த் சிங்கின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, உடலில் பல காயங்கள் இருந்தன. கழுத்தில் இரண்டு மூன்று இடங்களில் காயங்கள் அடையாளங்கள் இருந்தன. பிரேதப் பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் உடலினை புகைப்படம் மட்டும் எடுக்குமாறு கூறினார்.

கொலை தான்
சுஷாந்தின் உடலை நான் முதன் முதலில் பார்த்த போதே அது தற்கொலை அல்ல கொலை என்று எனக்கு தெளிவாக தெரிந்தது. ஆனால், மூத்த அதிகாரிகள் கூறியதால், போட்டோ எடுத்துவிட்டு இரவில் பிரேத பரிசோதனை செய்தோம். இது தற்கொலை இல்லை, கொலை என பல முறை சொன்னேன் அதையாரும் காது கொடுத்து கேட்கவில்லை.

கை, கால் உடைந்து இருந்தன
சுஷாந்த் உடல் சிதைந்த நிலையில் இருந்தது. கை, கால்கள் உடைந்து இருக்கும் போது அவர் எப்படி தூக்கில் தொங்கியிருக்க முடியும், அது சாத்தியமே இல்லாத ஒன்று, ஒருவர் தூக்கில் தொங்கும் போது, கழுத்தில் காணப்படும் தழும்புகள் வித்தியாசமாக இருக்கும். ஆனால், சுஷாந்த் சிங் கழுத்தில் காயங்கள் இருந்தன என்றார்.

மனதில் பூட்டி வைத்திருந்தேன்
இரண்டு ஆண்டுகளாக இதை மனதில் பூட்டி வைத்திருந்தேன். ஏன் என்றால், உயர் அதிகாரிகளால் என் வேலைக்கு பாதிப்பு வரும் என்று பயந்து வெளியில் சொல்லாமல் இருந்தேன். கூப்பர் மருத்துவமனை பிணவறையில் பணியாற்றி வந்த நான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டதால், இப்போது இதை தைரியமாக வெளியில் சொல்கிறேன் என்றார்.