Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மகளுக்கும் 18, அம்மாவுக்கும் 18: இது நடிகையின் கணக்கு
மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது மகளின் 18வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடியுள்ளார்.
பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற சுஷ்மிதா சென் நடிகையானார். திரையுலகில் பெரிய அளவுக்கு வர முடியாவிட்டாலும் தன் சொந்த காலில் நிற்கிறார். சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
திருமணம் செய்து கொள்ளாத அவர் ரினி, அலிஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
ரினி
மூத்த மகளான ரினியின் பதினெட்டாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார் சுஷ்மிதா சென். பிறந்தநாள் அன்று மகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
18
அன்பு மகள் ரினிக்கு 18 வயதாகிறது. நான் தாயாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. நானும், மகளும் ஒரே நேரத்தில் 18வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்று தெரிவித்துள்ளார் சுஷ்.
நடிகை
ரினிக்கு தன்னை போன்றே நடிகையாக விருப்பம் உள்ளது என்று சுஷ்மிதா தெரிவித்துள்ளார். 2 வயதில் இருந்தே ரினிக்கு நடிப்பு மீது ஆர்வம் அதிகமாம்.
படிப்பு
படிப்பை முடிக்கும் முன்பு ரினியை நடிக்க அனுமதிக்க மாட்டேன். வாழ்க்கைக்கு படிப்பு மிகவும் முக்கியம். முதலில் படிக்கட்டும் அதன் பிறகு நடிக்கட்டும் என்கிறார் சுஷ்மிதா.
பள்ளிப்படிப்பு
நான் பிளஸ் டூ பாஸ் செய்தவுடன் மிஸ் இந்தியா போட்டிக்கு சென்றுவிட்டேன். படிக்கவில்லையே என்று நினைத்தால் வருத்தமாக இருந்தது. அதனால் என் மகள்கள் டிகிரி வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்று சுஷ்மிதா கூறியுள்ளார்.