Don't Miss!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
திரைத் துளி
படத்தில் கவர்ச்சியும் ஆபாசமும் எல்லை தாண்டிவிட்டதாலும் ஆபாசமான வசனங்கள் ஏராளமாய் மலிந்திருப்பதாலும்சென்னையில் உள்ள சென்சார் போர்ட் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க மறுத்துவிட்டது.
எத்தனை ஏ வேண்டுானாலும் போட்டுக்குங்க.. சான்றிதழை மட்டும் குடுங்க என்று தயாரிப்பாளர் தரப்பில் கோரிக்கைவைக்கப்பட்டதாம.
ஆனால், எத்தனை ஏபோடுகிறோமோ அத்தனை அளவுக்கு படத்துக்கு மசுவு தான் கூடும் என்பதாலும் இதுக்கு எத்தனை ஏதான் போட்டாலும் பத்தாதே என்பதாலும் படத்தை சென்சார் செய்யவே தணிக்கை வாரியம் மறுத்துவிட்டதாம்.
இதையடுத்து மும்பையில் உள்ள அப்பீல் கமிட்டிக்கு காவடி எடுக்க படத் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.
இந்தப் படம் கொஞ்சம் ஓவராகவே போகுதே.. சென்சாரில் தப்புமா என்று சமீபத்தில் நாம் திருவாய் மலர்ந்தது உங்களுக்குநினைவிருக்கலாம். அந்த வாய் முகூர்த்தம் இப்போது பலித்திருக்கிறது.
நடிகை சொர்ணமால்யா, புளோரா, நடிகர் ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில் புளோராவும், சொர்ணமால்யாவும்போட்டி போட்டுக் கொண்டு வெட்கத்துக்கு பை பை சொன்னார்கள்.
புளோரா அளவுக்கு சொர்ணா போக மாட்டார் என்று அனைவரும் நினைத்திருக்க, சொர்ணா கிட்டக்க கூட புளோரா போகமுடியாது என்ற அளவுக்கு இறங்கி வந்து கவர்ச்சிப் பிரளயம் ஏற்படுத்திவிட்டார் சொர்ணமால்யா.
படத்தின் கதை என்ன தெரியுமோ?. ஸ்ரீமனின் நண்பர்கள் அவரது மனைவியான சொர்ணமால்யா மீது ஆசைப்படுவதாகவும்,அவரை அடைய முயற்சிப்பதும் தானாம். இதை சொர்ணாவும் ஜாலியாக எடுத்துக் கொண்டு கலக்குவது மாதிரி போகிறதாம்கதை.
சென்சாருக்கு வந்த படத்தைப் பார்த்த அதிகாரிகள் கதையின் கருவையும், அதைச் சுற்றி வந்த காட்சிகளையும் கண்டு அதிர்ந்துபோய்விட்டார்களாம். இவ்வளவு வக்கிரமான கருத்துடன் படத்தை எப்படி அனுமதிக்க முடியும் என்று இயக்குனர் சாகரிடம்கேட்டுள்ளனர்.
ஆனால், கடைசியில் எல்லோரும் திருந்துவது மாதிரி தானே காட்சி இருக்கு என்று சொல்லப்பட்ட சால்ஜாப்பை அதிகாரிகள்ஏற்கவில்லை.
இதைத் தவிர வசனங்களும் படு ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்துடனும் இருப்பதாகவும் சொன்ன சென்சார் போர்ட்அதிகாரிகள் இதற்கு சான்றிதழே தர முடியாது என்று கூறிவிட்டனராம்.