Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மகன் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு தடை கோரும் தந்தை டி.ஆர்.?
சென்னை: சிம்பு நடிப்பில் வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வெளியாகும் அச்சம் என்பது மடமையடா படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப் போகிறாராம் இயக்குனர் டி.ராஜேந்தர்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் அச்சம் என்பது மடமையடா. ஜூலை மாதமே வெளியாவதாக இருந்த படம் செப்டம்பர் 9ம் தேதி ரிலீஸாவதாக கவுதம் தற்போது அறிவித்துள்ளார்.
படப்பிடிப்பின்போது சிம்பு ஒத்துழைக்கவில்லை என்றும், பிற பட வேலைகளில் பிசியாகி இதை புறக்கணித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் ஒரு வழியாக பட வேலைகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
இந்நிலையில் படத்தை வெளியிட தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறாராம் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர். சிம்புவுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் முழுவதையும் கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய விடுவேன் என்கிறாராம் டி.ஆர்.
முதலில் மகனால் தள்ளிப் போன படத்திற்கு தற்போது தந்தையால் பிரச்சனை வருகிறது.