Don't Miss!
- News விடிவுகாலம்.. தேர்தல் முடிந்ததும் சென்னையின் முக்கிய பகுதி அடியோடு மாறுகிறது.. பிரம்மாண்ட பாலம் ரெடி
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டி.ஆரிடம் கையைக் கொடுத்து மூக்கை உடைத்துக் கொண்ட ‘ஒரு தலை ராகம்’ ரூபா!
சென்னை: நேற்று ஒருதலை ராகம் பட நாயகன் சங்கரின் இயக்கத்தில் உருவான முதல் தமிழ்ப் படமான 'மணல் நகரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஒரு தலை ராகம் படக்குழுவினர் அனைவரும் சந்தித்துக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தார் சங்கர்.
இப்படத்தின் ஆடியோவை டி.ராஜேந்தர் வெளியிட ஒருதலை ராகம் பட நாயகி ரூபா பெற்றுக் கொண்டார்.
தொட்டுப் பேசக் கூடாது
பொதுவாக தனது படங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மற்ற பெண்களைத் தொட்டுப் பேசக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருபவர் டி.ஆர்.
மறந்த ரூபா
அவரது படத்தில் நடித்திருந்தும் கூட 34 வருடங்கள் ஆகி விட்டதால் அதனை மறந்து விட்டார் போலும் ரூபா.
புன்னகைத்துக் கொண்டே கை குலுக்க
மற்றவர்களைப் போலவே மேடை ஏறியதும் டி.ஆரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே கை குலுக்க கையை நீட்டினார்.
பதிலுக்கு வணக்கம்
ஆனால், டி.ஆரோ தனது இரு கைகளையும் கூப்பி பதிலுக்கு அவருக்கு வணக்கம் கூறினார்.
வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே
இதனால் அதிர்ச்சியடைந்த ரூபா, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே தனது கைகளைப் பின்னால் இழுத்துக் கொண்டார்.