Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும்! - டி ராஜேந்தர்
சென்னை: ரஜினியும் கமலும் என் நண்பர்கள். அவர்கள் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும் என்று டி ராஜேந்தர் கூறினார்.
சிம்பு, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'இது நம்ம ஆளு' படம் தெலுங்கில் வெளியாகிறது. பாண்டிராஜ் இயக்கி இருந்த இப்படத்திற்கு குறளரசன் இசையமைத்திருந்தார். சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் டி.ராஜேந்தர் தயாரித்து இருந்தார். இப்படத்திற்கு தெலுங்கில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் வெளியாவது குறித்து இன்று டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த டி ராஜேந்தர், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலக நாயகன் கமலும் எனது நண்பர்கள். அவர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நிறைய செய்திகள் கேள்விபடுகிறேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களும் வரட்டும். வருவேன், வருவேன் என்று சொல்லாமல், உடனடியாக வந்து மக்கள் பணி செய்தால் சந்தோஷம்," என்றார்.