புத்தாண்டு புத்துணர்வோடு பிறக்கட்டும், புவியெங்கும் மக்கள் வாழ்வு சிறக்கட்டும்: டி.ஆர். வாழ்த்து
சென்னை: இலட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி. ராஜேந்தர் மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

கடவுள் அருளால் கடந்த ஆண்டின் கஷ்டங்களும்
கண்ணீரும் நீங்கட்டும்..
புத்தாண்டு புத்துணர்வோடு பிறக்கட்டும்...
புவியெங்கும் மக்கள் வாழ்வு சிறக்கட்டும்...
மண்ணுலகம் செழிக்கட்டும்...
மனித நேயம் தழைக்கட்டும்...
மத நல்லிணக்கம் பெருகட்டும்...
மக்கள் மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும்...

எல்லாம் வல்ல இறைவன் மனம் இரங்கட்டும், எல்லோர் இதயங்களிலும் கருணை மழை இறங்கட்டும், இலட்சியம் பொங்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Comments


Click it and Unblock the Notifications