பாகுபலி பாடலுக்காக பிரபாஸ் முன்பு 'அப்படி' நிற்கவில்லை: தமன்னா
சென்னை: பாகுபலி படத்தில் வரும் பச்சை தீ நீயடா பாடலில் தனது மேலாடையை முழுவதுமாக அவிழ்த்துவிட்டு நிற்பது போன்ற காட்சி குறித்து தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் வெளியான பாகுபலி சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் வரும் பச்சை தீ நீயடா பாடலில் ஒரு காட்சியில் தமன்னா தனது மேலாடையை கழற்றிவிட்டு பிரபாஸ் முன்பு நிற்பார்.

இந்த காட்சியால் சர்ச்சை ஏற்பட்டது. தெலுங்கு ரசிகர்களோ தமன்னாவை சமூக வலைதளங்களில் வெச்சு செஞ்சனர். இந்நிலையில் இந்த காட்சி குறித்து தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
பச்சை தீ நீயடா பாடலுக்காக நான் ஒன்றும் மேலாடையை அவிழ்த்துவிட்டு எதுவும் இல்லாமல் நிற்கவில்லை. கேமராவில் அப்படி காட்டியுள்ளனர். அவ்வளவு தான் என்றார்.


Click it and Unblock the Notifications











