Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கே பாலச்சந்தருக்கு சிலை... இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை!
சென்னை: இயக்குநர் சிகரம் என அழைக்கப்பட்ட மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தருக்கு மயிலாப்பூரில் சிலை வைக்க வேண்டும் என இயக்குநர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே தலைவராக இருந்த விக்ரமன், செயலாளராக இருந்த ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக இருந்த வி.சேகர், துணைத் தலைவர்களாக இருந்த பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், இவர்கள் அனைவரும் மீண்டும் அந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இதேபோல் இணைச் செயலாளர்களாக சுந்தர் சி, பேரரசு, லிங்குசாமி, ஏகாம்பவாணன், ஆ.ஜெகதீசன் ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
செயற்குழுவுக்கு 17 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 2015-2017-ம் ஆண்டுக்கான இயக்குநர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் விக்ரமன் தலைமை தாங்கினார். பொருளாளர் வி.சேகர் முன்னிலை வகித்தார்.
கூட்டம் முடிந்தபின், விக்ரமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இயக்குநர்கள் சங்க வரலாற்றில் முதல்முறையாக அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அணியினர் செய்த சேவைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் இது.
வருகிற ஆண்டுகளில், முடங்கிக் கிடக்கும் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து முயற்சி மேற்கொள்வோம்.
சமையல் கேஸ் மானியத்தை நான் திருப்பிக் கொடுத்து விட்டேன். எங்கள் சங்க உறுப்பினர்களாக இருக்கும் மேலும் 200 பேர் கியாஸ் மானியத்தை திருப்பிக் கொடுக்க முன்வந்துள்ளனர்.
சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு நான் உடல் தானம் செய்து இருக்கிறேன். இதுபோல் சங்க உறுப்பினர்கள் 200 பேர்களும் உடல் தானம் செய்ய முன்வருவார்கள்.
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு சென்னை மயிலாப்பூரில் சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார்.