Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திரைத் துளி
தமிழ்த்திரை தொலைக்காட்சியின் சார்பில் 4 படங்கள் தயாரிக்கப்படவுள்ளன.
திருட்டு விசிடி மூலம் கேபிள் ஆபரேட்டர்கள் புதிய படங்களை ஒளிபரப்புவதற்கு எதிராக, தாங்களே புதிய படங்களை சின்னத்திரையில் ஒளிபரப்ப முடிவு செய்த திரையுலகினர் தமிழ்த்திரை என்ற டி.வி.சேனலைத் தொடங்கினர்.
தமிழ்த்திரை தொலைக்காட்சி சார்பில் 4 படங்கள் தயாரிக்கப்படவுள்ளன. ஞாபகம் வருதே என்ற படத்தை இயக்குனர் சேரனும், ஆறுவது சினம் என்ற படத்தை பி.வாசுவும், இனி என்ற படத்தை ரேவதியும் மற்றும் ஒரு பெயரிடப்படாத படத்தை பாரதிராஜாவும் இயக்குகிறார்கள்.
இதற்கான தொடக்க விழா ரெசிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.
ஸ்னேகா, ரேவதி, மன்சூர் அலிகான், விக்னேஷ், பாண்டியராஜன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளிதரன், தயாரிப்பாளர்கள் இப்ராஹிம் ராவுத்தர், கோவை தம்பி, சத்யஜோதி தியாகராஜன், பி.எல்.தேனப்பன்,
இயக்குனர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்,ரவிக்குமார், ஆர்.வி.உதயக்குமார், சசி, ஒளிப்பதிவாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்த்திரையின் நிர்வாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி சிறப்புரை ஆற்றினார்.
ஒன்றரை மணி நேரம் ஓடும் வகையில் தயாரிக்கப்படும் இந்தப் படங்கள் வாரந்தோறும் ஒளிபரப்பப்படும். தமிழ்த்திரை இம்மாத 3வது வாரத்திலிருந்து அதிகாரப்பூர்வ ஒளிபரப்பைத் தொடங்க உள்ளது.