Just In
- 7 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 8 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 11 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 12 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
Coronavirus Vaccine: தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடக்கம்
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெப்சியில் மீண்டும் இணைக்கக்கோரி டெக்னீஷியன் யூனியன் உண்ணாவிரதம்
சென்னை : தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி அமைப்பிற்கும் மோதல் உருவாவதற்கு மூல காரணமாக இருந்தது டெக்னீஷியன் யூனியன்.
மதுரையில் நடந்த 'பில்லா பாண்டி' படப்பிடிப்பை டெக்னீஷியன் யூனியன் நிறுத்தியது தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமாக அமைந்தது.
இதனால் சமாதானப் பேச்சு வார்த்தையின் போது தயாரிப்பாளர்கள் சங்கம் இனி ஒரு போதும் டெக்னீஷியன் யூனியனை பயன்படுத்த மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தது.

பெப்சியில் இருந்து நீக்கம் :
இந்த விவகாரத்தால் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் மோதல் ஏற்பட்டு பிறகு பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெக்னீஷியன் யூனியன் பெப்சியிலிருந்து நீக்கப்பட்டது.

ஆட்கள் தேவை அறிவிப்பு :
அதோடு, சினிமாவில் பணிபுரிவதற்கு அனுபவம் வாய்ந்த மற்றும் புதிய டெக்னீஷியன்கள் தேவை என்கிற அறிவிப்பும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது.

மீண்டும் இணைக்க கோரிக்கை :
இந்நிலையில், தங்களை மீண்டும் பெப்சியில் சேர்க்கக்கோரி டெக்னீஷியன் யூனியனைச் சேர்ந்தவர்கள் அதன் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் தனபால் ஆகியோர் தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதம் இருந்தனர்.

தொடர் உண்ணாவிரதம் :
'டெக்னீஷியன் யூனியனை பெப்சி அமைப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நடைமுறையில் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கி வந்த சம்பளத்தைத் தொடர்ந்து வழங்க வேண்டும். இந்த இரண்டையும் நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் 25-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்' எனத் தெரிவித்துள்ளனர்.