Don't Miss!
- News அள்ள அள்ள தங்கம்.. பளபளன்னு ஜொலித்த நகைகள்.. திருவண்ணாமலை பேங்க்கில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அடக்கடவுளே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உண்மையை கூறிய இயக்குனர்கள்... மேடையில் அழுத தம்பி ராமையா!
பிரபல இயக்குனர்கள் பேசியதை கேட்டு நடிகர் தம்பி ராமையா கண்கலங்கினார்.
Recommended Video
சென்னை: 'மணியார் குடும்பம்' பட விழாவில் பிரபு சாலமன், சேரன் உள்ளிட்ட இயக்குனர்கள் பேசியதை கேட்டு நடிகர் தம்பி ராமையா மேடையிலேயே கண்கலங்கினார்.
வி.யு.சினிமாஸ் சார்பில் தேன்மொழி சுக்ரா தயாரித்து, நடிகர் தம்பி ராமையா இயக்கி, இசையமைத்துள்ள படம் மணியார் குடும்பம். தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக புதுமுகம் மிருதுளா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
'மணியார் குடும்பம்' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுது. பிரபல இயக்குனர்கள் பாக்கியராஜ், சேரன், பிரபு சாலமன், மோகன் ராஜா, கரு.பழனியப்பன், சிறுத்தை சிவா, கௌரவ், நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, டிரெய்லர் மற்றும் இசையை வெளியிட்டனர்.
விழாவில் பேசிய இயக்குனர் பிரபு சாலமன், மைனா படத்திற்குள் தம்பி ராமையா எப்படி வந்தார், அவர் பட்ட கஷ்டங்கள் என்ன என்பது குறித்து நினைவு கூர்ந்தார். அதேபோல, சேரன் பேசும்போது, தம்பி ராமையா தனது தாய் மீது வைத்திருக்கும் பாசம் குறித்து பேசினார். கரு.பழனியப்பன், அவரது மனைவி குறித்து பேசினார். இவர்கள் பேசும் போது, மேடையிலேயே கண்கலங்கினார். இது விழாவுக்கு வந்த அனைவரையும் நெகிழ வைத்தது.