Don't Miss!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- News
தமிழ்நாடு தன்னுரிமை கழகம்.. புதிய கட்சியை துவக்கிய ‛சர்க்கார்’ வில்லன் பழ கருப்பையா.. கொடிய பாருங்க!
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உண்மையை கூறிய இயக்குனர்கள்... மேடையில் அழுத தம்பி ராமையா!
Recommended Video

சென்னை: 'மணியார் குடும்பம்' பட விழாவில் பிரபு சாலமன், சேரன் உள்ளிட்ட இயக்குனர்கள் பேசியதை கேட்டு நடிகர் தம்பி ராமையா மேடையிலேயே கண்கலங்கினார்.

வி.யு.சினிமாஸ் சார்பில் தேன்மொழி சுக்ரா தயாரித்து, நடிகர் தம்பி ராமையா இயக்கி, இசையமைத்துள்ள படம் மணியார் குடும்பம். தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக புதுமுகம் மிருதுளா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

'மணியார் குடும்பம்' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுது. பிரபல இயக்குனர்கள் பாக்கியராஜ், சேரன், பிரபு சாலமன், மோகன் ராஜா, கரு.பழனியப்பன், சிறுத்தை சிவா, கௌரவ், நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, டிரெய்லர் மற்றும் இசையை வெளியிட்டனர்.

விழாவில் பேசிய இயக்குனர் பிரபு சாலமன், மைனா படத்திற்குள் தம்பி ராமையா எப்படி வந்தார், அவர் பட்ட கஷ்டங்கள் என்ன என்பது குறித்து நினைவு கூர்ந்தார். அதேபோல, சேரன் பேசும்போது, தம்பி ராமையா தனது தாய் மீது வைத்திருக்கும் பாசம் குறித்து பேசினார். கரு.பழனியப்பன், அவரது மனைவி குறித்து பேசினார். இவர்கள் பேசும் போது, மேடையிலேயே கண்கலங்கினார். இது விழாவுக்கு வந்த அனைவரையும் நெகிழ வைத்தது.