Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திடீரென ஏறிய "பி.பி".. பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மம்முட்டி
திருவனந்தபுரம்: மலையாள நடிகர் மம்முட்டிக்கு திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகத் திகழும் நடிகர் மம்முட்டி மும்பையில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாயிலிருந்து மும்பை வந்தார்.
அப்போது அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த அழுத்தம் அதிகமானதால் மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை எடுத்த பின்னர் கடந்த சனிக்கிழமை பெங்களூரில் உள்ள மதர்வுட் மருத்துவமனையில் மீண்டும் மம்முட்டி சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இந்த உடல்நலக்குறைவால் கடந்த ஒருவார காலமாக மம்முட்டி படப்பிடிப்பு தொடர்பான எந்த ஒரு விழாக்களிலும் கலந்து கொள்ளவில்லை.
தற்போது அவர் பெங்களூரில் உள்ள அவரது மகள் வீட்டில் ஓய்வு மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்து வரும் மம்முட்டி சரியான ஓய்வு எடுத்துக் கொள்ளாததால் இந்த உடல்நலக்குறைவு அவருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.
தற்போது ஓய்வில் இருந்தாலும் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பில் மம்முட்டி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இது குறித்து கேள்விப்பட்ட கேரள முதல்வர் உம்மன் சாண்டி தனது தனி உதவியாளர் மூலம் மம்முட்டியைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் முதல்வரால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.